பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்623

984.

கனித் திரள் இதழ் பொதி செம்மை கண் புக.
நினைப்பது ஒன்று. உரைப்பது ஒன்று. ஆம் ஒர் நேரிழை.
தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும்
குனித்தது; பனித்தது. குழவித் திங்களே.*
 

கனித்திரள்  இதழ்  பொதி  செம்மை  கண்புக  -  கொவ்வைக்
கனிபோன்று  திரண்ட  இதழ்களில்  மிகுந்திருக்கிற செந்நிறம் கண்களில்
போய்ச்சேர;நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை
-  மனத்தால்   நினைப்பது   ஒன்றும்.  வாயால்  சொல்வது ஒன்றுமாக
ஆகிப்போன  சிறந்த அணிகள்  பூண்டாள் ஒருத்தியின்; தனிச் சுடர்த்
தாமரை  முகத்துச்  சாபமும்  
-  தனி  ஒளி  வீசும் (அவள்) தாமரை
முகத்தில்    உள்ள    வில்போன்ற     புருவங்களும்;    குனித்தது;
குழவித்திங்கள்  பனித்தது
வளைந்தன;  நெற்றியென்னும்  பிறைச்
சந்திரனும் வியர்த்தது.

கோபத்தின்     குணங்கள் யாவும்   கள்   உண்பார்க்கு உளவாதல்
சுட்டியவாறு.  “திங்களுள்  தீத்  தோன்றியற்று”  (கலி 41: 24)  என்றாற்
போல.  “திங்களும்  வியர்த்தது” என மதுவின்  கொடுமை  கூறியவாறு.
மதுவுண்பார்  உள்ளமும் உரையும் ஒன்றுபடாமல்  நினைப்பது  ஒன்றும்
உரைப்பது  ஒன்றும்  ஆக  ஆவார்  என்பார்.  “நினைப்பது   ஒன்று
உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை” என்றார்.                  23
 

985.

இலவு இதழ் துவர் விட. எயிறு தேன் உக.
முலை மிசை. கச்சொடு கலையும் மூட்டு அற.
அலை குழல் சோர்தர. அசதி ஆடலால்.
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே.

 

இலவு   இதழ்  துவர்விட - இலவம் பூவை ஒத்த (வாய்) இதழ்கள்
(தமக்குரிய)  செந்நிறம்  நிங்கவும்;  எயிறு  தேன்  உக  -  பற்களின்
இடையே  ஊறும்நீர்  இனிக்குமாறு  சுரக்கவும்;  முலைமிசை கச்சொடு
கலையும்  மூட்டு  அற  
-  தனங்களின்  மீது  அணிந்த  கச்சுடனே
(இடையில்  அணிந்த)  ஆடையும்  முடிச்சு   அவிழவும்;  அலைகுழல்
சோர்தர
- கூந்தல் அலைவதனால் சரிந்து வீழவும்; அசதி ஆடலால் -
பரிகாசச்   சிரிப்புத்   தோன்றுவதனால்;  கொழுநர் செய்  கலவியும்
கள்ளும்   ஒத்த   
-   கணவர்   (தம்மோடு)  செய்கின்ற  கலவியும்.
மாதர்உண்ட கள்ளும் சமம் ஆயின.

எச்சங்கள்    குறிக்கும் செயல்கள்  எல்லாம் கலவிக்கும் கள்ளுக்கும்
பொதுவாதலால்.   “கொழுநர்   செய்    கலவியும்   “என   மாற்றிக்”
கூட்டப்பட்டது.  உதடு வெளுத்தல். பல் அடியில்  இனிய  நீர் சுரத்தல்.
ஆடையும்   கச்சும்   அவிழ்தல்.   கூந்தல்   குலைதல்.   பரிகசித்தல்
ஆகியவை மது வுண்ணல். கலவி புரிதல் ஆகிய