மன்றல் நாறு ஒருசிறை இருந்து ஓர் வாள்நுதல்-மணம் வீசும் ஓர் இடத்திலே இருந்து கொண்டு. ஒளிபெறும் நெற்றியை யுடையாள் ஒருத்தி; தன் துணைக் கிள்ளையைத் தழீஇ - தனக்குத் துணையாகவுள்ள கிளியைத் தழுவி; என் ஆவியை இன்று போய்க் கொணர்கிலை - என் உயிர் நாயகனை இன்று (தூதாகப்) போய் அழைத்து வந்தாய் அல்லை; என் செய்வாய் எனக்கு - (இந்த உதவியைத் தவிர வேறு) எனக்கு என்ன உதவி செய்ய இருக்கிறாய்?; அன்றிலோடு ஒத்தி - (பிரிந்தாரைத் தன் ஒலியால் வருத்தும்) அன்றிலைப் போலவே நீயும் இருக்கிறாய்; என்று அழுது சீறினாள் - என்று கூறிப் புலம்பி வெகுண்டு கொதித்தாள். பிரிந்தாரைச் சேர்க்கும் உதவியிலும் பெரிய உதவி உலகில் வேறு இல்லை. நீ. போய் அவரை அழைத்து வாராமல் அவர் பெயரை மட்டும் ஓயாது கூவி என்னை துயர் உறுத்துகிறாய்; அன்றில் வெளியே கூவுகிறது; நீ உள்ளே கூவுகிறாய். ஆக. துயர் உறுத்துவதில் இரண்டுபேரும் ஒன்றே; இடமே வேறுபாடு என்கிறாள். மேல் பாடலில் கிளி கூவலில் மகிழ்ந்தாள். இப்பாடலில். அதுவும் வெறுத்தாள். பிரிந்தார்க்குத் துயர்தரும் பொருள்களுள் அன்றிலும் ஒன்று. 28 |