பக்கம் எண் :

628பால காண்டம்  

கொண்டானை    மகிழ்விக்கத் திட்டமிடத் திண்டாடும் மகளிர் உயர்
பண்பு கூறியபடி. “புலப்பன்  கொல்;  புல்லுவேன் கொல்லோ; கலப்பென்
கொல்; கண்ணன்ன கேளிர்வரின்” திருக்குறள் (1267).              31
 
 

993.

மாடகம் பற்றினள்; மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் - ஒருத்தி. தன் பாங்குளார்களோடு
ஊடினது உரைசெயாள். - உள்ளத்து உள்ளதே.

 

ஒருத்தி. ஊடினது தன் பாங்குளார்களோடு உரை செயாள்- ஒரு
மங்கை.   தான்    தன்    கணவனோடு    பிணங்கியுள்ளதைத்   தன்
தோழியரோடு  வாய்திறந்து  சொல்லாதவளாய்;  மாடகம் பற்றிய மகர
வீணையை   
-   முருக்காணி   பொருந்திய   மகரமீன்  வடிவமைந்த
வீணையினை; தன் தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள்
-  இதழ்கள்  விரிந்த தாமரைப் பூப்போன்ற தன் கரங்கள் சிவப்புறும்படி
தொட்டு;  தன் உள்ளத்து  உள்ளது பாடினள் - தன் உள்ளத்துள்ளே
மறைந்த  ஊடற்  காரணங்களைத்  (தன்  கணவன்  மட்டுமே குறிப்பால்
உணர்ந்து கொள்ளுமாறு வீணையிலிட்டுப்) பாடினாள்.

தன்     உள்ளத்துள்ளதைப்   பாங்கிமார்   அறியின்.   அவனைத்
தூற்றுவர்;   அதனை   இவள்பொறாள்   ஆதலின்.  “உரை  செயாள்;
பாடினாள்”  என்றார்.  கணவன்  குறையைப்  பிறர் அறியாமல் பேணும்
பெண்மையின் தனிப்பண்பு சுட்டினார்.                          32
 

994.

குழைத்த பூங் கொம்பு அனாள்
   ஒருத்தி. கூடலை
இழைத்தனள்; அது. அவள்
   இட்டபோது எலாம்
பிழைத்தலும். அனங்க வேள்
   பிழைப்பு இல் அம்பொடும்
உழைத்தனள்; உயிர்த்தனள்.
   உயிர் உண்டு என்னவே.
 

குழைத்த     பூங்கொம்பு  அ(ன்)னாள் ஒருத்தி - தளிர்த்துள்ள
பூங்கொடி  போன்றாள்   ஒருமங்கை;  கூடலை  இழைத்தனள் - (தன்
கணவன்  வருகையை   யறிய)க்  கூடல்  சுழிகளை (விரலால்) கீறினாள்;
அது  அவள் இட்ட போது எலாம் பிழைத்தலும்
- (அக்கூடற்சுழிகள்
கூடும்  என்று  நினைத்துக்)  கீறிய  போதெல்லாம் கூடாமல் போனதும்;
அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் உழைத்தனள்
- மன்மதன்
இட்ட  பிழையாத  அம்புகளால்  தூளாக்கப்பெற்று  வருந்தினள்; உயிர்
உண்டு?  என்ன உயிர்த்தனள்
- உயிர் இவளுக்கு உண்டோ என்னும்
ஐயம் தீர்க்க மூச்சு விட்டனள்.