ஒருத்தி. பதைத்தனள் ஒருத்தன் மேல் பஞ்சு அடிஉதைத்தலும்- ஒரு மங்கை. (தன் கணவன்மேல் கொண்ட ஊடலால்) பதைபதைத்தவளாகி. அவனைத் தன் பஞ்சனைய மெல்லடியால் உதைத்தவுடன்; வெஞ்சிறை இதைப்புனல் நனைத்திட - கடிய வேலியையுடைய (உடம்பாகிய) தினைப்புனத்தில் (உதையால் உண்டாகிய இன்பப் புனல்) நனைத்ததனால்; விதைத்த மென்காதலின் வித்து முளைத்ததே என - விதைக்கப்பட்ட மெல்லிய காதலாகிய முளைகள் (உடனே) முளைத்து விட்டதைப்போல; உரோம ராசி பொடித்தன - அவன் உடம்பில் உள்ள மயிர்க்கூட்டங்கள் சிலிர்த்து நின்றன. பிற விதைகள் காலந்தாழ்த்து முளைக்கும்; காதல் விதை உடனே முளைக்கும் எனக் கூறி வியந்தவாறு. அவள் பாதம் பட்டவுடன் அவன் புளகாங்கிதம் அடைந்தான்; உரோமஞ்சலி உண்டாயிற்று என்பதை அழகுற உருவகித்தார். உடம்பைக் கொல்லையாகவும். காதலை வித்தாகவும். விதைத்த இன்பத்தை நீராகவும். உரோம ராசியைக் காதல் முளையாகவும் உருவகித்தார். ஒருத்தி பதைத்தனள்; உதைத்தலும் இதைப் புனல் நனைத்திட. விதைத்த மென்காதலின் வித்து முளைத்தவே யென உரோம ராசி பொடித்தன எனக் கூட்டுக. 36 |