பக்கம் எண் :

632பால காண்டம்  

நல்லோர்கள்; ஆட்டுநீர்க்கலசம்  என்னல்  ஆன  - பட்டாபிடேகஞ்
செய்ய வைத்துள்ள (புனித) நீர்க்கலசங்களைப் போன்றிருந்தன.

இன்ப   நாட்டிற்குரிய   கலசங்களாதலின்    இவ்வாறு   கூறினார்;
தற்குறிப்பேற்ற அணி.

நாடுகாக்கும்     போருக்காகப்  பிரிந்து. வென்றி வாகை சூடி வரும்
தவைனை வரவேற்கப் பூரண கும்பமேந்தி  நிற்கின்றாள்  என்க.  அவன்
பெற்ற   துன்பம்   எல்லாம்   நீங்க    இன்பநாட்டிற்கு   அழைக்கும்
பொற்கலசத்தோடு.  ‘அந்த  நாட்டை  அளித்தாய்;  இந்த நாட்டினையும்
ஏற்பாயாக  என்று வரவேற்பது போன்றிருந்தன  பொங்கும்  கொங்கைப்
பொற்குடங்கள் என்பது கருத்து. 39
 

1001.

பயிர் உறு கிண்கிணி. பரந்த மேகலை.
வயிர வான் பூண் அணி. வாங்கி நீக்கினாள்;
உயிர் உறு தலைவன்பால் போக உன்னினாள்;
செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள்.
 

(ஒருத்தி)   உயிர்உறு தலைவன்பால் போக உன்னினாள் - (ஒரு
மங்கை)  தன்   உயிர்  அனைய  கணவனிடம்  பிரிவுத்துயர் தாங்காது
உடனே  போக  நினைத்தாள்; பயிர்உறு கிண்கிணி. பரந்த மேகலை.
வயிர வான்பூண் அணிவாங்கி  நீக்கினாள்  
- (பிறர் அறியச் செய்து
விடும்   இவையென்று)    ஒலிமிகுகின்ற   கிண்கிணிகளையும்.  பரவிய
மேகலையையும்.   உயர்ந்த   வயிரமணி    அணிகளையும்    கழற்றிப்
போக்கினாள்;  செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள் - பிரிவில்
தன்  ஒளியால்  வருத்திய  பகைத்திங்கள்  (இப்போதும்)   எல்லோரும்
அறிய  வெளிச்சம்  தருவது கண்டு (அதனைக்) கண்களில்  கனல்  எழ
நோக்கினாள்.

பிறர்     காணாமற் செல்ல  அணிகளைக் கழற்றி எறிந்தமை போல்.
வானத்துத்  திங்களை  ஒன்றும்   செய்ய இயலாமை  பற்றிக் கனல் எழ
நோக்கினாள்  என்க.  இரகசியமாகச்   செய்யும்   பணிகட்கு  ஒலிக்கும்
இயல்புடையார்   ஆகார்.   ஆதலின்.   “தலைவன்    பால்    போக
உன்னினாள்.....பூண்   அணி  வாங்கி  நீக்கினாள்”   என்றார்.   “கலன்
கழித்து   அகல  நீத்தார்.   அறைபறையனைய   நீரார்   அருமறைக்கு
ஆவரோதான்?” (கம்ப. 1017) என்பார் பின்னும்.                  40
 

1002.ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும்-
ஆலை மென் கரும்பு அனான் ஒருவற்கு. ஆங்கு. ஒரு
சோலை மென் குயில் அனாள் சுற்றி வீக்கிய
மாலையை நிமிர்ந்தில. வயிரத் தோள்களே?
 

ஆலைமென் கரும்பு அனான் ஒருவற்கு - ஆலையில் அரைபட்ட
மெல்லிய  கரும்பு  போலப்  (பிரிவுத் துயரால்) வருந்திய ஒரு வீரனுக்கு;
ஆங்கு  ஒரு  சோலைமென் குயில்  அனாள்  
- அங்கு. சேலையில்
உள்ள  மெல்லிய  குயில்  போன்ற   குரல்  உடையாள் ஒருத்தி; சுற்றி
வீக்கிய  மாலையை  
- (அவனைச்)  சுற்றிக் கட்டிய (மலர்) மாலையை;
வயிரத் தோள்கள் நிமிர்ந்தில
- அவ்வீரனுடைய வயிரம் போன்ற