பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்641

துறை அறி கலவிச் செவ்வித்
   தோகையர் தூசு வீசி.
நிறை அகல் அல்குல் புல்கும்
   கலன் கழித்து அகல நீத்தார்;-
அறை பறை அனைய நீரார்
   அரு மறைக்கு ஆவரோதான்?

 

நறைகமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர்- தேன்
மணம் மிகுந்து அசைகின்ற  மலர்  மாலை சூடிச் செறிந்து மணம் வீசும்
குடுமியினையுடைய   ஆடவர்கள்;  துறை   அறி  கலவி  செவ்வித்
தோகையர்   தூசு  வீசி  
-  இன்பக்  கலவையின்  துறைகளையறிந்து
பக்குவமற்ற  மகளிரின்  ஆடைகளை  அப்பால்   எறிந்துவிட்டு; நிறை
அகல்  அல்குல்  புல்கும் கலன் கழிந்து அகல நீத்தார்
- (மேலும்)
நிறைந்து     அகன்ற      இடைப்      பகுதியைத்    தழுவியிருந்த
மேகலையென்னும்   அணியையும்    வெறுத்து    அப்பால்   வீசினர்;
அறைபறை  யனைய  நீரார்  
-  (ஏன்  எனில்) (செய்திகளைக் கூவி)
அறைகின்ற   பறை   போன்று  (எப்போதும்   வாய்விட்டுக்   கத்தும்)
தன்மையினர்;  அருமறைக்கு  ஆவரோ?  -  வெளிப்படுத்தக் கூடாத
இரகசியச்  செயல்  நிகழ்கையில்   உடன்   இருக்கும்   தகுதியுடையார்
ஆவாரோ? (ஆகார்)

தான்   - அசை. “தாம் கேட்ட மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்
அறைபறை யன்னர் கயவர்”  என்னும்  திருவள்ளுவப்  பெருந்தகையின்
திருக்குறள்  (1076) கருத்தை. பொன்னணியில்  பதித்த  நல்  மணியாய்ப்
பொதிந்து ஒளிரச் செய்துள்ளார் - வேற்றுப்பொருள் வைப்பணி.     56
 

1018.

பொன் அருங் கலனும். தூசும்.
   புறத்து உள துறத்தல் வம்போ?
நல் நுதல் ஒருத்தி. தன்பால்
   அகத்து உள நாணும். நீத்தாள்;-
உன்ன அருந் துறவு பூண்ட
   உணர்வுடை ஒருவனேபோல்.
தன்னையும் துறக்கும் தன்மை
   காமத்தே தங்கிற்று அன்றே.

 

புறத்துள்  பொன் அரும்  கலனும் தூசும் துறத்தல் வம்போ? -
(உடலின்)  வெளியேயுள்ள   அணிகலன்களையும்  ஆடைகளையும் (ஒரு
மங்கை)  துறந்தாள்  (முன்பு)  புகன்றது (ஒரு)  புதுமையோ?; நல்நுதல்
ஒருத்தி
- அழகிய நெற்றியினையுடையாள் ஆகிய  (இன்னும்)  ஒருத்தி;
தன்பால்   அகத்துள்  நாணும்  நீத்தாள்  
- தன்னிடத்தே.  (பிரிதற்
கியலால் கிடந்த) உடலின் உள் உள்ள  நாணத்தையும் து றந்துவிட்டாள்;
உன்ன அருந்துறவு பூண்ட உணர்வுடை ஒருவனே போல்
- நினைப்