பக்கம் எண் :

642பால காண்டம்  

பதற்கும்     அருமையான   துறவினைப்  பூண்ட மன உறுதிமிக்க ஒரு
துறவியைப்போல; தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று
அன்றே!  
-  தான்  என்று  சொல்லத் தக்கதையும் துறந்து விடக்கூடிய
இயல்பு. காமத்தினிடத்தில் மட்டுமே தங்கியுள்ளதன்றோ?

கலனும்     தூசும்     அகற்றியபின்     வரும்     நாணுந்துறந்து
அவசமுற்றிருந்தாள். உயிரினும் சிறந்தது  பெண்மைக்கு  நாணம் (தொல்.
கல.   22)  ஆதலின்.   அதனைத்  துறத்தல்.   தன்னையே   துறத்தல்
ஆயிற்று.  காமக்  கணிச்சி   உடைக்கும்   நிறையென்னும்  நாணுத்தாழ்
வீழ்த்த கதவு” (திருக். 1251) - வேற்றுப் பொருள் வைப்பணி.        57
 

1019.

பொரு அரு மதனன் போல்வான்
   ஒருவனும். பூவின்மேல் அத்
திருவினுக்கு உவமை சால்வாள்
   ஒருத்தியும். சேக்கைப் போரில்
ஒருவருக்கு ஒருவர் தோலார்.
   ஒத்தனர்; - ‘உயிரும் ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே’
   என்ற போது யாவர் வெல்வார்?

 

பொரு அறு மதனன் போல்வான்  ஒருவனும் - (அழகில் தனக்கு)
உவமை  சொல்ல   ஒருவனும்   இல்லாத  மன்மதனைப்  போல் வான்
ஒருவனும்;   பூவின் மேல் அத்  திருவினுக்கு  உவமை  சால்வாள்
ஒருத்தியும்   
-   (தாமரை)   மலர்   மேல்   வாழும்  மங்கையாகிய
திருமகளுக்கு   உவமிக்கத்   தகுதியுடையாள்  ஒருத்தியும்;  சேக்கைப்
போரில்
- மஞ்சத்தில் நிகழ்ந்த கலவிப் போரிலே; ஒருவருக்கு ஒருவர்
தோலார்   ஒத்தனர்   
-   ஒருவருக்கு   ஒருவர்   பின்னடையாமல்
சமநிலையிலேயே  (இன்பப்  போர்   புரிதலில்)  இருந்தனர்; இருவரது
உயிரும் ஒன்றே உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வர்
-
ஏன்   எனில்   இருவருக்கும்    உயிரும்   உணர்ச்சியும்  ஒன்றேயாக
இருக்கையில் யார் வெல்ல இயலும்? (யார் தோற்க இயலும்)

உடல்     அன்றி  உயிர்  ஆற்றலும்   உணர்வாற்றலுமே   வெற்றி
தோல்வியை  நிர்ணயிப்பன;   அவை  இரண்டும் இவ்விருவர்க்கும் சமம்
ஆதலின்.  கலவிப்  போரில்   ஒருவர்க்கொருவர்  தோற்காமல்  போர்
புரிந்தனர்.  ஒருவரும்  தோற்க  இயலாத  போது   ஒருவரும்  வெற்றி
பெறலும்  இயலாது என்பார். “ஒருவருக்கு ஒருவர்  தோலார்  ஒத்தனர்”
என்றும்.  காரணம்.  “இருவரது  உயிரும்  ஒன்றே;  உணர்வும் ஒன்றே
என்றபோது யாவர் வெல்வார்?” என்றார்.                       58
 

1020.கொள்ளைப் போர் வாள் - கணாள் அங்கு
   ஒருத்தி. ஓர் குமரன் அன்னான்
வள்ளத் தார் அகலம்தன்னை
   மலர்க்கையால் புதைப்ப நோக்கி.