பக்கம் எண் :

644பால காண்டம்  

மேல்வினை    அரம்பை மாதர் என்பதோர் விருப்பை ஈந்தாள் -
வான்  உலகில்  உள்ள  அரம்பை  மாது   இவள் என்று கருதத் தக்க
பேரின்பத்தினை அளித்தாள்.

கறையற்ற     காதல். வானகத்து  இன்பத்தை எல்லாம் மண்ணுக்குக்
கொண்டு   வரவல்லது   என்றபடி.   “வேலையன்ன   மால்”  என்பது
கடலன்ன  காமம்  (திருக்.  1137)  எனும்   குறட்பகுதியோடு   ஒத்தது.
வானுலக     இன்பத்தை    வையகத்தே     தந்ததாலும்    குன்றாது
கொடுத்ததாலும். அவள் விண்ணுலக அரம்பை ஆயினாள்.         60

கலிவிருத்தம்
 

1022.

புனத்து உள மயில் அனாள்.
   கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள்
   ஒருத்தி. நீடிய
சினத்தொடு காதல்கள்
   செய்த போரிடை.
மனத்து உறை காதலே
   வாகை கொண்டதே.

 

புனத்து     உள மயில் அனாள் - குறிஞ்சி நிலக் கொல்லைகளில்
வாழும்  மயிலையொத்தவளாய்; கொழுநன் பொய்உரை நினைத்தனள்
சீறுவாள் ஒருத்தி
- கணவன் உரைத்த பொய்ம் மொழிகளை நினைத்து
வெகுள்பவளாகிய  ஒருத்தியின்;  நீடிய சினத்தொடு காதல்கள் செய்த
போரிடை  
-  (மனத்தில்  கொண்ட)  (ஊடல்)  சினத்தோடு.   இருவர்
உள்ளத்திலும்   எழுந்த  காதல்   வேட்கைகள்   மோதிய  போரினில்;
மனத்து உறை காதலே வாகை கொண்டது
- மனத்தில் எழுந்த காதல்
வேட்கையே வெற்றி பெற்றது.

ஏ     - அசைநிலை. ஊடலில் தோற்றுக் காதலில் வெல்வது (திருக்.
1330)  உயர்  மரபு ஆதலால்.  “மனத்துள காதலே வாகை கொண்டது”
என்று   மகிழ்ந்தார்.   வருவேன்    என்று  சொல்லி  வராத  அவன்
பொய்யுரைக்கு  வெகுளி  பிறந்தது.  அவன்  வந்தால் இணங்கக்கூடாது
என.   அதனால்  அவளுக்கு  ஊடல்   பிறந்தது.   ஆனால்.  அவன்
வந்தவுடன்  உள்ளத்தில்  காதல்  பிறந்தது.  இருவர்  காதலும் சேர்ந்து
இவள்  ஊடலோடு  மோதல்  பிறந்தது. அப்போரில் ஊடல்  தோற்றுக்
காதல்  வெற்றிக் கொண்டது என்றார். “ஊடலில்  தோற்றவர் வென்றார்
அது   மன்னும்   கடலிற்   காணப்படும்   (திருக்.   1327)   என்பது
வள்ளுவம்.                                                61
 

1023.

கொலை உரு அமைந்தெனக்
   கொடி நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள்.
   கணவற் புல்குவாள்.