பக்கம் எண் :

646பால காண்டம்  

1025.

துனி உறு புலவியைக் காதல். சூழ் சுடர்
பனி என. துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள்.
புனை இழை ஒரு மயில். பொய் உறங்குவாள்.
கனவு எனும் நலத்தினாள். கணவற் புல்லினாள்.*

 

காதல்   -  காதலானது; துனிஉறு புலவியை - துயர்மிகச் செய்யும்
ஊடலை;  சூழ்  சுடர்பனி  எனத்  துடைத்தலும் - (கதிரவன்) சுற்றிப்
பரப்பும்  கிரணங்களால்  பனியை  அழிப்பது போல நீக்கி விட்டவுடன்;
புனை  இழை  ஒருமயில்  
- அணிகள் அணிந்த மயில் அனைய ஒரு
மங்கை;  பதைக்குஞ்  சிந்தையாள்  -  (ஊடல்  நீங்கியவுடன் கூடத்)
தவிக்கும்  மனம்  உடையவளாய்;  பொய்  உறங்குவாள்  -  (உடனே
தழுவின்   தன்   பெருமை  குன்றும்   என்று)   உறங்குபவள்  போல்
பொய்யாக உறங்கி; கனவு எனும் நலத்தினால் கணவற் புல்லினாள் -
(அஞ்சத்தக்க  கனவு  கண்டவள் போல்)கனவு  தரும் நல் உதவியினால்
கணவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.

பள்ளியறையில்     “கிழவோள்   உயர்வு”   (தொல். பொருள். 31)
பாதிக்கப்  படாதிருக்க  நிகழும்  சாகசங்களுள்    ஒன்று  சுட்டியவாறு.
கதிரவன்  பனியைத் துடைத்தல்   போல்  காதல் ஊடலைத் துடைத்தது.
வலியத்  தழுவின்  பெண்மையின்  உயர்வு   தாழும்   என்று.  பொய்
உறக்கம்  கொண்டு.  அதில் பொய்க் கனவும் கண்டு.  அச்சக்  கனவால்
அணைப்பாள் போல் அணைத்து மகிழ்ந்தாள்.                    64
 

1026.

வட்ட வாள் முகத்து ஒரு மயிலும். மன்னனும்.
கிட்டிய போது. உடல் கிடைக்கப் புல்லினார்;-
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்;-
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால்
-
 

வட்டவாள்     முகத்து  ஒருமயிலும்  மன்னனும் - வட்டமாகிய
ஒளிமுகமுடைய   ஒரு  மயில்   போன்றாளும்   (அவள்)   கணவனும்;
கிட்டிய  போது  உடல் கிடைக்கப் புல்லினார்
- (ஒருவர்க்கொருவர்)
நெருங்கியபோது.  கிடைக்க  (இறுகத்   தழுவ   ஏற்ற  வாய்ப்பொன்று)
கிட்டியதனால்  தம்  உடல்  இறுகத் தழுவினர்; ஒட்டிய உடல் பிரிப்பு
உணர்கிலாமையால்   
-   (ஒன்றாக)  ஒட்டிக்  கொண்ட  உடல்களை.
(இரண்டாகப்)  பிரிக்க  அறிய  மாட்டாமையால்; விட்டிலர்; கங்குலின்
விடிவு  கண்டிலர்  
-  
தழுவிய  கரங்களை விடாதவர் ஆயினர்; இரவு
விடிந்து போனதையும் அறியாதவர் ஆயினர்.

ஒன்று  தெரிந்து  ஒன்று தெரியாமையால் உற்ற இடர் உரைத்தவாறு.
தழுவத்தெரிந்தது;  விடத்   தெரியவில்லை.  இரவு விட்டதும் தெரியாது.
தழுவல்  விடாமற்  கிடந்தனர்  என்பார். “விட்டிலர்  கங்குலின் விடிவு
கண்டிலர்”  என்றார்.  “குக்கூ என்றது கோழி; அதன்  எதிர்  துட்கென்
றன்றென்  தூய  நெஞ்சம்”  (குறுந்.  157)  எனக்   காதலர்  விடியலை
விரும்பாமை கூறப்படும். “காதலற் பிரியாமல் கவவுக்கை