பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்649

அறைந்த     நெறி   விடா  புலமை  -  (இவ்விவ்  வழிகள்)  நீதி
அமைந்தவை  யென்று   மறைகள்  சொன்ன வழிகளை விடாமற்சென்று
பின்பற்றும் (உயர்) ஞானத்தினையும்;செங்கோல் வெண்குடை வேந்தர்
வேந்தன்  
-  செங்கோலினையும்.  வெண்  (கொற்றக்)  குடையினையும்
(தரித்த) வேந்தர்க்கு எல்லாம் வேந்தனாகிய தசரதச்  சக்கரவர்த்தி; முக
படாம்   மலையில்  தோன்றும்  
- முக  படாத்தினையுடைய  மலை
போன்ற  யானைகளிடத்திலிருந்தும்  உண்டாகி; பருவம் ஒத்து அருவி
பல்கும்  
- பருவகாலத்துக் கேற்ப  அருவிகளாகப் பெருகுகின்ற; கடாம்
நிறை  ஆறு  பாயும்  
- மத நீர் ஓடும் ஆறுகள் (தன்னிடத்தே) வந்து
பாய்கின்ற;   கடலொடும்  கங்கை  சேர்ந்தான்  -  (சேனையெனும்)
சமுத்திரத்துடனே கங்கையாற்றின் கரையினை யடைந்தான்.

வேதம்     செல்லத்தக்க   நெறிகளை  யுணர்த்துவது;  அதுகாட்டும்
செந்நெறியிலேயே  சென்றவன்  தயரதன்  என்பதாம்.  கங்கை கடலைச்
சேரும்;  இங்கே.  கடல்  கங்கையைச்   சேர்ந்தது  என்பது  ஒரு நயம்.
முதல்   இரண்டடிகளிலும்   வேதம்   இன்னது   என்பதும்.   அதனை
விடாமற்  பின்  பற்றியதால்.  தசரதன்   வெண்குடையும்  செங்கோலும்
ஞானமும்  சிறந்து  வேந்தர்  வேந்தன்  ஆயினான்  என்பது  சுருங்கச்
சொல்லி விளங்க வைத்தார். பாயா வேங்கை.  பறவாக்  கொக்கு எனபது
போல. யானையை முகபடாம்மலை என்றார். குறிப்புப் பொருள்.       1
 

1030.

கப்புடை நாவின் நாகர்
   உலகமும் கண்ணில் தோன்ற.
துப்புடை மணலிற்று ஆகி.
   கங்கை நீர் சுருங்கிக் காட்ட.
அப்புடை அனீக வேலை
   அகன் புனல் முகந்து மாந்த.
உப்புடைக் கடலும். தெண் நீர்
   உண் நசை உற்றது அன்றே.

 

கப்பு     உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற -
பிளவுபட்ட  நாக்கினையுடைய   நாகர்களின்   உலகம்  ஆகிய பாதாள
லோகமும்  கண்ணுக்குத்  தோன்றுமாறு;  துப்புடை மணலிற்று ஆகிக்
கங்கை நீர் சுருங்கிக் காட்ட
- தூய்மையுடைய மணலைப் பெற்றதாய்.
கங்கைநதி  தண்ணீர்  குறைந்து  தோன்றும்படி;  அப்பு உடை அனீக
வேலை  அகன்  புனல் முகந்து மாந்த
- அம்பு முதலிய ஆயுதங்கள்
மிகுந்த  அந்தச்  சேனா  சமுத்திரம். அகன்று கிடந்த அக்கங்கை நீரை
எடுத்துப்   பருகியதனால்;  அன்று. உப்புடைக்  கடலும்  தெண்ணீர்
உள்நசை  யுற்றது  
-  உப்புத்தன்மையுடைய   (உவர்  நீர்க்)  கடலும்
அப்பொழுது  தெளிந்த  அக்கங்கையின்  நீர்  (போய்ச்  சேராததனால்)
நீர் வேட்கை கொண்டது.