பக்கம் எண் :

650பால காண்டம்  

உப்புக்     கடலுக்குச்  சென்று  சேரும் கங்கையை. சேனைக் கடல்
உண்டு  விட்டது  என்தாம்.  உப்பு  நீர்.   தாகம்   தீர்க்காது. அதனை
மிகுதிப்  படுத்தும்.  ஆதலால்  உப்புக்  கடலை   உண்டு  தன் தாகம்
தீர்த்து  வந்தது.  இன்று.  தசரதன் படைக் கடல்  கங்கைப்  பெருக்கை
உண்டு விட்டதனால். உப்புக்கடலாகிய சமுத்திரம்  அன்று  தாகம் மிகக்
கொண்டது   என்று.   சேனையின்   பெருமை  கூறியவாறு.   உயர்வு
நவிற்சியணி.                                                2
 

1031.

ஆண்டு நின்று எழுந்து போகி.
   அகன் பணை மிதிலை என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர்
   இரு நிலக் கிழவன் எய்த.
தாண்டு மா புரவித் தானைத்
   தண்ணளிச் சனகன் என்னும்
தூண் தரு வயிரத் தோளான்
   செய்தது சொல்லலுற்றாம்.

 

இருநிலக்     கிழவன் ஆண்டு நின்று எழுந்து போகி - பெரிய
நிலத்துக்குரியவனான  தசரதன்.  அக் கங்கை  நதியைக் கடந்து சென்று;
அகன்பணை  மிதிலை என்னும்
- அகன்ற வயல்கள் சூழ்ந்த மிதிலை
யெனும்  பெயருடைய; ஈண்டு நீர் நகரின் பாங்கர் எய்த - நீர் வளம்
மிக்க    நகரத்தின்   அருகில்.   சேர்ந்த   அளவில்;   தாண்டும்மா
புரவித்தானை  
- பாய்வதில்  பெருமையுடைய  குதிரைப்படைகளையும்;
தண்ணளிச்  சனகன்  என்னும்
- (நெஞ்சில்) கருணையையும் உடைய
சனகன்   என்னும்   பெயரிய;   தூண்தரு  வயிரத்   தோளான்  -
தூண்களைப்  போன்ற  உறுதிமிக்க   தோள்களையுடையவன்; செய்தது
சொல்லல்    உற்றாம்   
-    செய்த    செயல்களைச்    சொல்லத்
தொடங்குகிறோம்.

கவிக்கூற்று.     வெளியே   படைகளும்..   உள்ளே   கருணையும்
நிறைந்தான் எனச் சனகனின் வீரமும் ஈரமும் ஒரு சேரக் கூறியவாறு. 3

                           தயரதனைச் சனகன் எதிர்கௌ வருதல்
 

1032.

‘வந்தனன் அரசன்’ என்ன.
   மனத்து எழும் உவகை பொங்க.
கந்து அடு களிறும். தேரும்.
   கலின மாக் கடலும். சூழ
சந்திரன் இரவிதன்னைச்
   சார்வது ஓர் தன்மை தோன்ற.
இந்திரதிருவன் தன்னை
   எதிர் கொள்வான் எழுந்து வந்தான்.