பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்655

ஆழியான்   திருவடிகள் உலகளந்த அன்று உண்டாக்கிய துளையின்
வழியால்  படையால்  எழுந்த  புழுதி   வெளியண்டத்திலும்   பரவுதல்
எளிதாயிற்று   என்க.   இன்றேல்.   இவ்வுலகம்   புழுதி   மிகுதியால்
திக்குமுக்காடியிருக்கும்  என்பது  கருத்து. அண்ட  கடாகத்திலும்  தூளி
பரவிற்று   என்றதனால்.  இவ்  வேழ்  உலகில்  பரவியமை   சொல்ல
வேண்டா  ஆயிற்று.  அரோ  - அசை. உயர்வு  நவிற்சியணி. பூழை -
சிறுதுளை.                                                 10
 

1039.மன் நெடுங் குடை மிடைந்து
   அடைய வான் மறைதர.
துன்னிடும் நிழல் வழங்கு இருள்
   துரப்பு எளிதுஅரோ-
பொன் இடும். பூண் இடும்.
   புனை மணிக் கலன் எலாம்
மின் இடும்; வில் இடும்;
   வெயில் இடும்; நிலவு இடும்!
 

மன்நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறை தர- அந்தச்
சேனையில்   மன்னர்களின்  நீண்டகுடைகள்   நெருங்கி.   (அதனால்)
வானம் முழுவதும்  மறைபட; துன்னிடும் நிழல் வழங்கு இருள்துரப்பு
எளிது  
- (அங்கு) நிறைந்த நிழலானது தருகின்ற இருட்டை  ஓட்டுவது
எளியதேயாம்; பொன் இடும்  பூண்இடும் புனைமணிக் கலன் எலாம்
மின் இடும்
- (எங்ஙனமெனில்) பொன்னால் செய்யப்பட்ட  அணிகளை
இட்டு (அதன் மேல்) அழகிய மணிகளைப் பதித்த    (அச்சேனையினர்)
ஆபரணங்கள்  எல்லாம்  மின்னலைப்போல்  ஒளிவிடும்; வில்இடும் -
பன்னிற மணிகள் (தம்) ஒளிவீச்சால் வானவில் போல் பலநிற   ஒளிகள்
சிந்தும்; வெயில் இடும் - (சில மணியாபரணங்கள்) கதிரவனின் வெப்ப
ஒளியை  வீசும்;  நிலவு  இடும்  -  (சில  மணியணிகள்)  சந்திரனின்
குளிர்ந்த ஒளிகளை உமிழும்.

‘புவியிடும்     “எனும்  பாடத்திலும்”  பூண்  இடும்”  எனும் பாடம்
பொருட்சிறப்புடையது.   இறுதியிரண்டடிகள்   உயர்   கவிகளுக்கேயுரிய
சொல்  இன்பச்சுவை பிலிற்றி  நிற்றலை ஓதி யுணர்க. படையின் செலல். 
இருள் நீங்கி ஒளிமிகுவதை  “எரிந்தெழுபல்  படை”(கம்ப: 8329)  எனும்
பாடலிலும் உரைப்பார்.                                       11

                            சனக மன்னன் வருகின்ற வழிக் காட்சி
 

1040.தா இல் மன்னவர்பிரான் வர. முரண் சனகனாம்
ஏ வரும் சிலையினான். எதிர் வரும் நெறி எலாம்.
தூவு தண் சுண்ணமும். கனக நுண் தூளியும்.
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடிஎலாம்.