பக்கம் எண் :

656பால காண்டம்  

தாஇல்     மன்னவர் பிரான் வர-  குற்றமில்லாத   மன்னர்க்கு
மன்னனான     தசரதச்     சக்கரவர்த்தி.     தனது      நகரத்திற்கு
வருகைபுரிகையில்; முரண் சனகனாம் ஏவரும் சிலையினான்- வலிமை
மிகும்  சனகனாகிய  அரிய அம்புகள் தொடுக்கவல்ல  வில்  வீரனாகிய
அரசன்;  எதிர்வரும்  நெறிஎலாம் -  எதிர்  கொண்டு அழைத்துவர
உள்ள வழிகள் முழுவதும்;தூவுதண் சுண்ணமும் கனக நுண் தூளியும்
-   மங்கல  நிகழ்ச்சிகளில்  மேலே  தூவப்படுகிற   குளிர்ச்சி   தரும்
வாசனைப்   பொடிகளும்  (அணிகளின்   உராய்வினால்)   சிந்துகின்ற)
பொன்னாபரணங்களின்  நுட்பமான பொற் பொடிகளும்;  பூவின் மென்
தாது   உகும்  பொடியுமே  
-  மலர்களிலிருந்து  சிந்துகிற மெல்லிய
மகரந்தப்  பொடிகளும்  ஆகிய  இவையே; பொடி  எலாம் - (அங்குச்
சிந்திய) பல்வகைத் தூசுகள் ஆகும்.

உலகில்.    எளியவையே தூசு எனப்பட. அங்கு மதிப்பு மிக்கவையே
தூசுகள் ஆயின என்க. தா இல் - குற்றமற்ற;கேடு  அற்ற  எனினுமாம்.
“தாவா  விழுப்புகழ்ப்  பூவை  நிலையும்”  (தொல். புறத். 5) இரப்போர்
கடலை  ஈந்தே  கடந்து  (கம்ப.  172).   மண்ணின்மேல்   வான் புகழ்
நாட்டான்   ஆதலின்.   தசரதனை.    “தா  இல்   மன்னவர்  பிரான்
வர”எனறார்.                                               12
 

1041.நறு விரைத் தேனும். நானமும். நறுங் குங்குமச்
செறி அகில் தேய்வையும். மான்மதத்து எக்கரும்.
வெறியுடைக் கலவையும். விரவு செஞ் சாந்தமும்.
செறி மதத் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம்.
 

நறுவிரைத் தேனும் நானமும்- நறுமணமுடைய தேனும்.  (கூந்தலில்
கலந்தொழுகும்)  புனுகும்;  நறுங்குங்குமச் செறிஅகில் தேய்வையும்-
நல்ல   வாசனையுடைய   குங்குமப்   பூவோடு   சேர்ந்த   திண்ணிய
அகிற்கட்டைத் தேய்வினால் ஆகிய குழம்பும்; மானமதத்து எக்கரும் -
மான்மதமாகிய  கத்தூரியின்  மிகுதியும்;  வெறியுடைக்  கலவையும் -
பரிமளமுடைய  பல்வேறு  வாசனைப்   பொருள்களின்   சேர்க்கையும்;
செஞ்சாந்தமும்
- செந்நிறச் சந்தனமும்; விரவு செறி மதக் கலுழியாய்
சேறுமே    
-   சேர்தலால்   உண்டான    சேறுகளுடனே.   மிகுந்த
யானைகளின்  திரள்களில்  உண்டான  மதநீர்  பாய்கின்ற  சேறுகளும்;
சேறு  எலாம்  
-  (சேர்ந்த கலவையே படைசெல்லும் வழியில் உள்ள)
சேறுகள் யாவும். 

இழிகுணச் சேறின்றி. நறுமணச் சேறே வழியெங்கும் என்று கற்பித்து.
செல்வ வளமும். நாகரிகச் செழுமையும் சுட்டியவாறு. கலுழி - வெள்ளம்.
                                                        13
 

1042.மன்றல் அம் கோதையார்
   மணியினும் பொன்னினும்.
சென்று வந்து உலவும் அச்
   சிதைவு இலா நிழலின் நேர்.