பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்665

படும்     தன்மையது (திருக். 71)   ஆதலால்.   பரதனின்  கண்ணீரை.
“உன்னுபேர் அன்புமிக்கு ஒழுகிஒத்து” என்றார். “தள்ளரிய   பெருநீதித்
தனியாறு   புக  மண்டும்  பள்ளமெனும்  தகையாள்  பரதன்    எனும்
பெயரான்  (கம்ப.  657)  ஆதலால்.  பரதனைத்   தனித்துக்  கூறினார்.
‘எள்ளரிய   குணத்தாலும்   எழிலாலும்    இவ்இருந்த    வள்ளரையே
அனையான்” (கம்ப. 657) எனப்படுபவன் பரதன்    ஆதலின். “தன்னை
அத்தாதை முன் தழுவினான்” எனப் புல்லினான் என்றார்.          26

          இலக்குவன் பரதனையும் சத்துருக்கன் இராமனையும் பணிதல்
 

1055.கரியவன் பின்பு சென்றவன்.
   அருங் காதலின்
பெரியவன் தம்பி. என்று
   இனையது ஓர் பெருமை அப்
பொரு அருங் குமரர். தம்
   புனை நறுங் குஞ்சியால்.
இருவர் பைங் கழலும். வந்து.
   இருவரும் வருடினார்.
 

கரியவன்    பின்பு சென்றவன்- கருமை நிறத்தினனான இராமன்
பின்னே  தொடர்ந்தவனான இலக்குவனும்; அருங்காதலில்  பெரியவன்
தம்பி
- பிறரால் கொள்ளற்கு அரியதான இராம பக்தி  கொண்டவனான
பரதன் பின்செல்லுந் தம்பியான சத்துருக்கனனும்; என்ற  இனையதோர்
பெருமை  
-  என்ற  இத்தகைய ஒப்பற்ற பெருமையுடைய; அப்பொரு
இல்  குமரர்  இருவரும்  
-  ஒப்பிலாத  அந்தக்  குமரர்கள் இரண்டு
பேரும்;  வந்து. தம்புனை  நறும்குஞ்சியால்  -  அருகில் வந்து. தம்
மணம்மிகும்  முடிக்கொண்டு;  இருவர்  பைங்கழலும்  வருடினார்  -
(முறையே  பரதன்.  இராமன் என்னும்) இருவரது   பசும்பொன்னாலான
வீரக் கழலணிந்த திருவடிகளையும் வணங்கினர்.

பைங்கழல்     - ஆகுபெயர். பரதனை இலக்குவனும்.   இராமனைச்
சத்துருக்கனனும்  வணங்கினர் என்க. பரதனது அன்பை    இடங்கிட்டும்
போதுஎல்லாம்  உயர்த்தும் கவிஞர் பிரானின் ஆசை.   “அருங்காதலின்
பெரியவன்”   என   இங்கும்   வெளிப்படல்    காண்க.   இராமனும்.
இலக்குவனும்.   பரதனும்   சத்துருக்கனனும்   பிரியாமல்  வாழ்ந்ததை.
“பரதனும்  இளவலும்  ஒருநொடி  பகிராது..........எனை  ஆள்  வரதனும்
இளவலும் என மருவினர்” (கம்ப. 307) என முன்பே உரைத்தார்.    27

                           குமரர்கள் நால்வரும் விளங்கிய காட்சி
 

1056.‘கோல் வரும் செம்மையும்.
   குடை வரும் தண்மையும்.
சால் வரும் செல்வம்’ என்று
   உணர் பெருந் தாதைதன்.