பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்667

சேனையாகிய     செல்வங்களை    உன்னை     நெருங்கி    அருகே
சூழ்ந்திருக்குமாறு; ‘கொண்டு முன் செல்க’ என்று;    (அணைத்துக்)
கொண்டு  மக்களை வழிநடத்திச் செல்க   என்று;    தோன்றலை
அருளினான்
 - (தன் அருமைக் குமாரனாகிய)   இராமனை (நோக்கிப்)
பணித்தருளினான்.

தயரதனை.   “தாய் ஒக்கும் அன்பில்” கம்ப. 171) என்பார் முன்னும்.
செங்கோல்   தசரதனைப்   போல்    செலுத்தவேண்டும்   என்னுமாறு
ஆண்டான் ஆதலின். “சான்று எனத்தகைய  செங்கோலினன்”  என்றார்
-  வையகம்  முற்றும் வறிஞன் ஓம்பு  மோர்  செய்எனக் காத்து இனிது
அரசு  செய்தவன்  அவன்  (கம்ப.  179) ஆதலின்  இல்லறத்  திருவை
ஏற்க   இருக்கும்  இராமனுக்கு.  ஏற்ற  தருணம்   எனக்கருதி.   அரச
திருவை  எங்ஙனம் கொண்டுசெல்லவேண்டும் எனத்  தந்தை  மகனுக்கு
உரைத்த  அருமை  வாசகங்கள்  இவை.  அரசச்  செல்வம் எவையென
மேற்பாடலிலும்     இப்பாடலிலும்      தெளிவுறச்     சுட்டியுள்ளமை
இக்காலத்துக்குப் பொருந்துமாறு இலங்குதல் காண்க.               29
 

1058.காதலோ! அறிகிலம். கரிகளைப் பொருவினார்;
தீது இலா உவகையும். சிறிதுஅரோ? பெரிதுஅரோ?
கோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்.
தாதையோடு ஒத்தது. அத் தானையின் தன்மையே!
 

கரிகளைப்     பொருவினார்  - யானைகளைப்  போன்ற அப்படை
வீரர்களுடைய;   காதலோ   அறிகிலம்  -  (அரச  குமாரர்களிடத்து
வைத்துள்ள)   அன்பின்   மிகுதியோ     (இவ்வளவென்று)   எம்மால்
அறியமுடியாததாய்  உள்ளது;   தீது  இலா  உவகையும்  சிறிதரோ?
பெரிதரோ?  
-  (அவர்கட்கு அப்போது உண்டான) மாசற்ற மகிழ்ச்சிப்
பெருக்கு   குறுகிய   காலத்ததா?  நீண்ட  காலத்ததா?   (அறியோம்.);
கோதை சூழ் குஞ்சிக் குமரர் வந்து எய்தலும்
- மாலைகளைச் சூடிய
மயிர்  முடியோடு  காணப்பெறும்  அரசகுமாரர்கள்  வந்து   அடைந்த
அளவிலே; அத்தானையின் தன்மை தாதை யோடு ஒத்தது - அந்தப்
படையின்  இயல்பு  (இராம  இலக்குவர்களைக்  கண்ட) தந்தையாகிய
தசரதன் இயல்போடு சமமாகியது.

அரோ    - அசைகள்: “தாதையோடு ஒத்தது” என்றதனால். தசரதன்
அடைந்த   பேருவகையினைப்   படைகளும்  அடைந்தன    என்றார்.
எனவே.   இராம  இலக்குவர்  அத்தனை  பேர்க்கும்    மக்களாயினர்;
அத்தனை   பேரும்   இராம  இலக்குவர்க்குத்  தந்தையர்    ஆயினர்
என்பது கருத்தாகக் கொள்க.                                  30

                             இராமனும் தம்பியரும் சென்ற காட்சி
 

1059.தொழுது இரண்டு அருகும். அன்புடைய
   தம்பியர் தொடர்ந்து.
அழிவு இல் சிந்தையின் உவந்து.
   ஆடல் மாமிசை வர.