பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்669

விழும்படி.  சென்று; இஞ்சிசூழ் மிதிலைமா வீதி சென்று எய்தினான்
-  மதில்கள்   சூழ்ந்த   மிதிலை  நகரின்  பெரிய வீதிகளை (இராமன்)
அடைந்தான்.

நஞ்சும்     மலராக்க வல்ல நாயகன்  இராமன் என்க. மகளிர். கண்
அம்பு  மழையோடு. அவர் சொரிந்த   கடிமலர் மழையும் இராமன்மேல்
இடையீடின்றி  வீழ்ந்தன  என்க.  உயர்குடி   மகளிராதலின்.   வீதிக்கு
வாராமல்  மாளிகை  மேலிருந்து  மலர்மழையும்.  விழிவீச்சு   மழையும்
பெய்தனர் எனினுமாம்.                                      32
 

1061.சூடகம் துயல்வர. கோதை
   சோர்தர. மலர்ப்
பாடகம் பரதநூல்
   பகர. வெங் கட கரிக்
கோடு அரங்கிட எழும்
   குவி தடங் கொங்கையார்.
ஆடு அரங்கு அல்லவே -
   அணி அரங்கு அயல் எலாம்.

 
  

அணி     அரங்கு அயல்எலாம்- (அந்த நரகத்து வீதிகளிலுள்ள)
அழகிய  மண்டபங்களின்  பக்கங்களில்  எல்லாம்; சூடகம் துயல் வர.
கோதை  சோர்தர  
- தம் கைவளைகள் அசையவும். கூந்தல் தளர்ந்து
சரியவும்; மலர்ப் பாடகம்  பரத  நூல்  பகர  -  செந்தாமரை மலர்
போன்ற மெல்லிய பாதங்களில் பாடகம் என்னும்   காலணிகள் (நாட்டிய
சாத்திரமாகிய)  பரத  நூலிற்  கூறப்பட்ட தாளவிதி முறைகளைத்   (தம்
ஒலியால்) வெளிப்படுத்தவும்;  வெங்கடகரிக்கோடு  அரங்கிட  எழும்
குவிதடங்கொங்கையர்
- கொடிய மதமுடைய யானைகளின் கொம்புகள்
(அழகு)    கெடும்பிடியாக.   எழுந்து   குவிந்து   அகன்ற     பெரிய
தனங்களையுடைய மகளிர்; ஆடுஅரங்கு  அல்ல - ஆடல்புரியும் நடன
அரங்குகள்  போல (எங்கும்) தோன்றினும்  நடன  அரங்கங்கள்  என்று
கருதவேண்டா;அவர்கள் வாழும் மாளிகைகளே அவை என்று   துணிக.
துணிக.  

வளை     ஒலியும்.   குழல்  சரிவும்.   காரணித் தாளமுமாகச் சூழ
மங்கையர்  ஒல்கி ஒசிந்து நிற்கும் இடம் எல்லாம்  ஆடரங்கம்  என்றே
தோன்றும்;  ஏமாற  வேண்டா;  அவரவர்   மாடமாளிகைகளே  எனச்
சுறையுறக்  கூறினார். மாளிகைகள் யாவும்  அன்று  மகளிர் ஆடரங்கம்
போல மகிழ்வில் திளைத்தன என்பதாம்.                        33
 
  

1062.பேதைமார் முதல் கடைப்
   பேரிளம் பெண்கள்தாம்.
ஏதி ஆர் மாரவேள்
   ஏவ. வந்து எய்தினார்.