றது’ என்று கூறி; பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுங்காலை - (அந்நகரத்துப்) பெண்டிர் (கண்ணிலிருந்து இராமன் மறைவதற்கு) தங்களுக்குள் வருந்தி. மதிமயங்கும்போது; மண்கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை - (முன்பு திருவித்கிரம அவதாரத்தில்) மண்ணை ஓரடியால் அளந்துவிட்டு. வானையும் ஓரடியால் அளந்து மூன்றாம் அடிக்கு இடம்கேட்டவனான அந்த இராமனை; தன்தன் கண் கடவாது காத்த காரிகை - தான். தனது கண்களை விட்டு நீங்கவிடாமல் பாதுகாத்துக்கொள்ள இருக்கிற சீதை; பெரியளே காண் - எல்லாரினும் பெரியவளே ஆவாள்! (என்றனர்). ஓங்கி உலகளந்த பெரியரிற் பெரியனானவனை. தன் கண்களில் அடக்கிக் காப்பவளாகிய சானகி. அவனிலும் பெரியவளே என்று கவிஞர்பிரான். சமற்காரம் தோன்ற வியந்தவாறு. காண் - அசை. உலகளந்த. தன் காதற் கொழுநனைத் தன் கண்வட்டத்தில் வைத்துக் காக்கும் வாய்ப்பினைப் பெற்றுவிட்ட சீதையின் பெரும்பேற்றினை எண்ணிப் பெண்மைக்குரிய வியப்புணர்வோடு பெருமூச்செறிந்தவாறு. 7 |