பக்கம் எண் :

678பால காண்டம்  

தெரிவை     -  26-31   வயதுடையவள்.     உலகியற்பொருள்கள்
அனைத்தையும்  தாமே  தம்மை   விட்டு  நீங்குமாறு செய்வது ஆன்ம
நாயகன் மேல் கொள்ளும் அன்பு என்பது  குறித்தவாறு.  பயிர்ப்பு- பிற
ஆடவர்பொருள்கள்படின்  பெண்மைப்படும்  அருவருப்பு.   “உயிரினும்
சிறந்தது  நாணே  நாணினும்  செயிர்தீர்  காட்சிக்  கற்புச்  சிறந்தன்று”
(தொல்.  களவு.  23)  என்பவாதலின்.  இவள்  எப்படி    இவற்றையும்
உகுத்தாள் என வியந்தவாறு.                                  8
 

1071.குழை உறா மிளிரும் கெண்டை
   கொண்டலின் ஆலி சிந்த.
தழை உறாக் கரும்பின் சாபத்து
   அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறாப் புண் அறாத
   இள முலை ஒருத்தி சோர்ந்து.
மழை உறா மின்னின் அன்ன
   மருங்குல்போல் நுடங்கி. நின்றாள்.
 

குழைஉறா மிளிரும் கெண்டை- காதணியின் மேல்சென்று ஒளிரும்
கெண்டை  மீன்களைப்  போன்ற கண்கள்; கொண்டலின் ஆலிசிந்த-
மேகங்கள்  துளிகளைப் பொழிதல் போல. கண்ணீர்த்துளிகளைச்  சிந்தி
நிற்க; தழைஉறாக் கரும்பின் சாபத்து அனங்கவேள் சரங்கள் பாய-
தழையில்லாத  கரும்பினை  வில்லாகக்கொண்ட   மன்மதன்    (மலர்க்)
கணைகள்  (தன்மேல்)  பாய்வதனால்;  புண்அறாத - புண்கள் நீங்காத;
இழை  உறா இளமுலை  ஒருத்தி  சேர்ந்து  
- நூல் இழை நுழையும்
அளவும்  வெற்றிடம் இல்லாத இளைய தனங்களையுடையாள்   ஒருத்தி.
தளர்ந்தவளாய்;மழை உறா மின்னி அன்ன மருங்குல் போல் நுடங்கி
நின்றாள்
- மேகத்தில் உதிக்காமல் (மண்ணில் உதித்த)   மின்னற்கொடி
போன்ற   (தனது)   இடையினைப்   போலவே    (மற்றையங்கங்களும்
இளைத்து) (இராமன் சென்றுவிட்டதனால்) சோர்ந்து போய் நின்றாள்.

மழை    உறா மின்: தழைஉறாக் கரும்பு - இல்பொருள் உவமைகள்.
இடையைப்போல. உடல் முழுதும் இளைத்தது என்றதனால்.   இடையின்
இளைப்பை  உய்த்துணர்க.  என்பது  குறிப்பு.    “மென்மருங்குல்போல்
வேறுள அங்கமும் மெலிந்தாள்”. (கம்ப. 5072) என்பார் மேலும்.      9
 

1072.பஞ்சு அணி விரலினார்தம்
   படை நெடுங் கண்கள் எல்லாம்.
செஞ்செவே ஐயன் மெய்யின்
   கருமையைச் சேர்ந்தவோதாம்?
மஞ்சு அன மேனியான்தன்
   மணி நிறம். மாதரார்தம்