பக்கம் எண் :

  உலாவியற் படலம்679

அஞ்சன நோக்கம் போர்க்க.
   இருண்டதோ? அறிகிலேமால்.
 

பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங்கண்கள்   எல்லாம்-
செம்பஞ்சுக்குழம்பை    அணிந்த    (மெல்லிய)      விரலினையுடைய
அப்பெண்டிரின்  வாள்  போன்ற கண்கள் யாவும்;  செஞ்செவே ஐயன்
மெய்யின் கருமையைச் சேர்ந்தவோதாம்?
- இராமபிரானின் உடலின்
கருமையை  அவை  அடைந்தனவோ?;  மஞ்சு  அன மேனியான்தன்
மணிநிறம்   
-   (அல்லது)   மேகத்தை  ஒத்த  மேனியான்   ஆகிய
இராமபிரானின்  அழகிய   நிறம்;  மாதரார்தம்  அஞ்சன  நோக்கம்
போர்க்க  இருண்டதோ?  
- பெண்டிரின் அஞ்சன மையிட்ட கண்கள்
(அவனது    திருமேனியில்)    மொய்த்துக்   கிடந்தமையால்    அது
கருமையையடைந்ததோ?;   அறிகிலேமால்   -  (இவ்விரண்டில்  எது
நிகழ்ந்தது? என) எம்மால் துணிந்து அறியக் கூடவில்லை.

ஐயனின்     மேனியும்   அரிவையர்     விழிகளும்     நிறத்தில்
ஒன்றுக்கொன்று  கொண்டு கொடுத்துக் கொள்ளும்  தகுதியுடையனவாய்
இருந்தன   என்பது   கருத்து.   பெண்கள்   தம்   கண்கள்   அவன்
திருமேனியில் ஊன்றிக்கிடந்தன என்பதாம். பஞ்சு அணி   விரலினார் -
செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட விரலினையுடைய மகளிர்.          10
 

1073.மாந் தளிர் மேனியாள் ஓர்
   வாணுதல். மதனன். எங்கும்
பூந் துணர் வாளி மாரி
   பொழிகின்ற பூசல் நோக்கி.
‘வேந்தர் கோன் ஆணை நோக்கான்;
   வீரன் வில் ஆண்மை பாரான்;
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ
   ஒருவன்?’ என்றாள்.
 

மாந்தளிர்  மேனியாள் ஓர் வாள் நுதல்- மாவின் தளிர்போன்ற
(மென்மையான)   மேனியுடைய    ஒளிபொருந்திய நெற்றியையுடையாள்
ஒருத்தி; மதனன் எங்கும்  பூந்துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல்
நோக்கி    
-    மன்மதன்.   (பெண்களின்   மேல்)    எவ்விடத்தும்
பூங்கொத்துக்கள் ஆகிய அம்புமழையைப்பெய்கின்ற   போர்த்திறத்தைப்
பார்த்து;    வேந்தர்கோன்     ஆணைநோக்கான்     வீரன்வில்
ஆண்மைபாரான்   
-  தசரதச்  சக்கரவர்த்தியின்   ஆணைச்சிறப்பை
மதியாது   (வீரருட்சிறந்த)   வீரனாகிய   இராமபிரானுடைய  வில்லின்
ஆற்றலையும்  உணராது;  ஏந்திழையாரை  எய்வான்  - (ஆயுதங்கள்
அணியாது)   அணிகளை   யணிகிற  பெண்டிரின்  மீது  அம்பெய்து
வருத்துகிறவன்;  யாவனோ  ஒருவன்  என்றான்  -  (ஆகிய)  அந்த
ஒப்பற்ற வீரன் யாரோ? என்று வினவினாள்.