பக்கம் எண் :

682பால காண்டம்  

உருகுகின்றவளாய்.   (தன் தோழியை நோக்கி);  ‘தோழி!  நெஞ்சிடை
வஞ்சன்  வந்து  புக்கனன்
- (என் உயிர்த்) தோழியே! வஞ்சகனாகிய
இராமன்   என்நெஞ்சினுள்ளே   (கண்வழியாக    வந்து)   உட்புகுந்து
அகப்பட்டுக்கொண்டான்; போகாவண்ணம்  கண்  எனும் புலம்கொள்
வாயில்  சிக்கென  அடைத்தேன்
- அவன் இனி வெளியேறிவிடாதபடி
என் கண் இமைகளை அவன் உள் நுழைந்த  வாயிற்கதவைச்  சிக்கென
அடைத்துவிட்டேன்;  அமளிசேருதும் என்றாள் - (எனக்கு வழிகாட்டு)
அவனை நுகர்தற்கு மஞ்சம் சேர்வேன் என்று கூறினாள்.

தலைவி.     கண்களை மூடிக்கொண்டதனால். தோழியின் உதவியை
நாடினாள்.  உரியவர்  அறியாது நெஞ்ச வீட்டுள்  புகுந்து.  அங்கிருந்த
நாணம்.  நிறை  முதலிய  உயர் பொருள்களைக் கவர்தலால்   இராமன்
வஞ்சன்  ஆனான்.  ‘கண்  விழி  நுழையுமோர்  கள்வனே   கொலாம்
(கம்ப.  535) என்பார் முன்னும். “தளையவிழும் பூங்கோதைத்   தாயரே
ஆவி  களையினும்  என்கண்திறந்து காட்டேன் - வளை   கொடுபோம்.
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னொடும்  வந்து  என்கண்
புகுந்தான்    இரா”    எனும்    முத்தொள்ளாயிரம்      38   இங்கு
நினையற்பாலது.                                            14
 

1077.தாக்கு அணங்கு அனைய மேனி.
   தைத்த வேள் சரங்கள் பாராள்;
வீக்கிய கலனும் தூசும்
   வேறு வேறு ஆனது ஓராள்;
-
ஆக்கிய பாவை அன்னாள்
   ஒருத்தி - ஆண்டு. அமலன் மேனி
நோக்குறுவாரை எல்லாம்
   எரி எழ நோக்குகின்றாள்.

 

ஆக்கிய பாவை யன்னாள் ஒருத்தி - (கைவல்லான் ஒருவனால்)
ஆக்கப்பட்ட  பதுமை போன்றாள் ஒருத்தி;தாக்கு  அணங்கு  அனைய
மேனி; தைத்த வேள் சரங்கள் பாராள் - தாக்கி  வருத்தும் தெய்வ
நங்கை  போன்ற  தனது  மேனியில்  பாய்ந்த   மன்மத   அம்புகளை
மதியாதவளாய்; வீக்கிய கலையும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள்-
தான்    இடையில்    கட்டியிருந்த    மேகலையும்     ஆடையையும்
வேறுவேறாகப் பிரித்துள்ளதையும் உணராதவளாய்;  ஆண்டு  அமலன்
மேனி  நோக்குவாரை எல்லாம்
 - அங்கே. தூயவனான  இராமனின்
திருமேனியை    (அன்போடு)    பார்ப்பவரையெல்லாம்;   எரி   எழ
நோக்குகின்றாள்
- (கண்களிலிருந்து) தீப்பொறி எழுமாறு  (சினத்துடன்)
நோக்குவாள் ஆனாள்.

எரி     எழ  நோக்கியதற்கு  ஏது  பெருமானின்   திருமேனிக்குக்
கண்ணேறு   படக்கூடும்   என்பது.   தன்   காதற்குரியவனைப்  பிறர்
பார்ப்பது பொறாமையினாலும் எரி எழ  நோக்கினாள் ஆதல்வேண்டும்.
தாக்கணங்கு - தீண்டி வருந்துகின்ற