பக்கம் எண் :

706பால காண்டம்  

கோலும் தாங்கும்   சனக மன்னனை  இனிமையுடன்  பார்த்து; மா
இயல் நோக்கினாளைக் கொணர்க எனச்சொன்னான்
-  ‘மான்விழி
போன்ற   கண்ணாள்  ஆகிய  சீதையை  அழைத்து  வருக’  என்று
கூறியருளினான்.   

முன்பும்     (கம்ப.  316.  318)   தசரதவேந்தனுக்கு   இந்திரனை
உவமிப்பார்.  ஓவியத்திற்குத்  தயரதன் மனைவியர்  அழகு வடிவமும்.
அவர்கள்  இயக்கத்திற்கு  ஓவியம்  உயிர்  பெறுதலும்   உவமையாம்.
இல்பொருள்  உவமை. தயரதனோடு தயரதன் தேவியர் பலரும் உடன்
வந்தனர்  என்பதனை.  “நெறியிடைப்படர  வேந்தன்  நேயமங்கையர்
தாம்  செல்வார்”  (கம்.  793)  என எழுச்சிப் படலத்தும் உரைத்தார்.
“மாவியல்  நோக்கினாள்”  என்பதற்கு.  மாவடு   போன்றவிழியினாள்;
பெரிய  அகன்ற  விழியினாள் எனவுமாம். குலகுரு  முன்னர். தசரதன்
ஓவியர்  உயிர்பெற்றது  போல்  அடங்கியிருந்தனன்  என இரண்டாம்
அடிக்குப் பொருள் கூறுப.                                   1
 

             சனகன் ஏவிய மாதர் தாதியர்க்குச் செய்தி அறிவித்தல்
 

1118. 

உரைசெய. தொழுத கையன்.
   உவந்த உள்ளத்தன். ‘பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு
   என்று. ஆயிழையவரை ஏவ.
கரை செயற்கு அரிய காதல்
   கடாவிட. கடிது சென்றார்.
பிரைசம் ஒத்து இனிய சொல்லார்.
   பேதை தாதியரில் சொன்னார்.
 

உரை  செய -  (இவ்வாறு) வசிட்ட முனி சொல்லியருள; தொழுத
கையன். உவந்த  உள்ளத்தன் -  (அது  கேட்டு)  கூப்பி வணங்கிய
கரங்களையும். மகிழ்ச்சி பொங்கிய மனத்தையும்  உடையவனான  சனக
மன்னன்;  பெண்ணுக்கு   அரசியைத்   தருதிர்   ஈண்டு  என்று
ஆயிழையவரை    ஏவ
    -    பெண்ணினத்தின்    பேரரசியாம்
(பெருமாட்டியான)  சீதையை  இங்கே  அழைத்து  வாருங்கள்  என்று
ஆய்ந்தணிந்த  அணிகளையுடைய  மங்கையர் சிலரிடம்  ஆணையிட;
பிரைசம் ஒத்து  இனிய  சொல்லார் -  தேன்  அனைய இன்சொல்
பேசும் அப்பெண்கள்; கரை செயற்கு அரிய காதல் கடாவிடக்கடிது
சென்றார்
-   அளவிடற்  கரியதாய்ச்   (சீதை மேல் உள்ள)  அன்பு
உந்தித்தள்ள   விரைந்து   சென்றவர்களாய்;   பேதை   தாதியரில்
சொன்னார்
-  இளைய  பருவத்தினளான  சீதையின்   தோழியரிடம்
அச்செய்தியை (உடனே) போய்ச் சொன்னார்கள்.

கவிஞர்பிரான்     அரண்மனை   நடைமுறைகளை  நன்கறிந்தவர்
என்பதனை இப்பாவும் உணர்த்தும். ஆணைகளை  முறைப்படி ஒருவர்.
தமக்குக்  கீழ்  இருக்கும் ஒருவர்க்கு உரைக்க. அவர்  அவர்க்குக் கீழ்
இருப்பாரிடம்  உரைக்கும்  முறை  பண்டே  யிருந்தமை இப்பாடலால்
தெளியலாம். மாமுனி வசிட்டனின் ஏவல்