பக்கம் எண் :

736பால காண்டம்  

தன்னை   யுணர்ந்து.   தலைவனையறிய   உதவும்  மெய்ஞ்ஞானம்
தலைப்பட்டவர்   பேரா  இன்பம்  பெறுகுவர்.   அவ்வின்பம்   பெறத்
தடையாயுள்ள    மயக்க    அறிவு   நீங்கியவுடன்     தன்னையறிந்து
தலைவனை  உணரும்  நிலைகூடும்; அப்போது அந்தமில்   இன்பத்து
அழிவில்  வீடும்  கூடும் என்பது பின்  இரண்டடியின்  கருத்து.  இருள்
நீங்கி  இன்பம்  பயக்கும்  மருள்  நீங்கு மாசறு  காட்சியவர்க்கு.  (352)
என்பார் திருவள்ளுவர்.                                      39
 
  

                                       திருமண நாள் குறித்தல்
 

1156.
 
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்.
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை. ‘மேலோய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம்.
எல்லையில் நலத்த. பகல் என்று? உரைசெய்க!’ என்றான்.
 

கொல்உயர் களிற்று அரசர் கோமகன்- வருத்தும் பெரியயானைப்
படையினையுடைய  தசரதச் சக்கரவர்த்தி; இருந்தான் கல்விகரை உற்ற
முனி  கௌசிகனை
- அங்கு ஆதனத்தில் வீற்றிருந்தவனாகிய  கல்விக்
கடலின்   கரை   கண்டவனாம்  விசுவாமித்திர   முனிவரை   நோக்கி;
மேலோய்
- மேன்மைக்குணம்  வாய்ந்தோய்; வல்லி  பொருசிற்றிடை
மடந்தை
- மலர்க்கொடியனைய  சிற்றிடையையுடைய  சீதையின்;  மண
நாளாம் எல்லையில் நலத்த  பகல்  என்று?  
திருமண   நாளாகும்
பேறுபெற்ற. அளவற்ற  புண்ணியம் படைத்த  அந்நாள் எந்நாள்  என்று;
உரைசெய்க என்றான்
- கூறியருளுக என்று வேண்டினான்.

நாள்களால்    நலமுறுவார் பலர்.  சிலரால்  நாள்கள்  நலம்பெறும்.
ஆதலால். சீதை மணத்தால் புனிதம் பெறும்  அந்நாள் எந்நாள்  என்று
தயரதன்  வினவினன்  என்க.   அந்நாள்  பங்குனி  உத்தரம்   என்று
முதல்நூலாகிய  வான்மீகத்தால்   அறியப்படும்.  உலகின்  துயர்  நீங்க
இராவண   வதம்   நிகழ.   இம்மண   நாள்   மூலவித்து   ஆவதும்
தோன்ற”எல்லையில் நலத்த பகல்” என்றார்.                     40
 

1157.
 
‘வாளை உகள. கயல்கள் வாவி படி மேதி
மூளை முதுகைக் கதுவ. மூரிய வரால் மீன்
பாளை விரியக் குதி கொள் பண்ணை வள நாடா!
நாளை’ என. ‘உற்ற பகல்’ நல் தவன் உரைத்தான்.
 

வாளை உகள வாளை மீன்கள்துள்ளிக் குதிக்க; கயல்கள் வாவிபடி
மேதி மூளைமுதுகைக் கதுவ
- (அஞ்சிய) கயல் மீன்கள்.  நீர்நிலையில்
கிடந்த  எருமைகளின்  தலையையும். முதுகையும் கவ்வ; மூரிய  வரால்
மீன்
-  வலிமை வாய்ந்த வரால் மீன்கள்; பாளை விரியக் குதிகொள்
பண்ணை வளநாட்
- பாளைகள்  விரியும்படி (கமுக  மரத்தில் தாவிக்)
குதிக்கின்ற  வயல்  வளமுடைய கோசல நாட்டு  மன்னனே!; உற்றபகல்
நாளை என நல் தவன் உரைத்தான்
-