பக்கம் எண் :

  கோலம் காண் படலம்737

திருமணத்திற்குப்  பொருந்திய  நாள்  நாளையாகும்  என்று  நல்லதவம்
மிகுந்த விசுவாமித்திர முனிவன் உரைத்தான்.                    41
 

                       தரசதன் முதலியோர் இருப்பிடம் செல்லலும்
                                           கதிரவன் மறைதலும்
 

1158.சொற்ற பொழுதத்து. அரசர்
   கைதொழுது எழ. தன்
ஒற்றை வயிரச் சுரி கொள்
   சங்கின் ஒலி பொங்க.
பொன்-தடமுடிப் புது
   வெயில் பொழிதர. போய்.
நல் தவர் அனுச்சை கொடு.
   நல் மனை புகுந்தான்.
 

சொற்ற   பொழுதந்து-  (இங்ஙனம்  கோசிக  முனிவன்)   கூறிய
பொழுதில்;  அரசர்  கைதொழுது  எழ  -  (தசரதன்)   மற்றையரசர்
எல்லோரும்  தன்னைக்  கைகூப்பி  அஞ்சலி   செய்து  எழவும்;  தன்
ஒற்றை வயிரச் சுரிகொள் சங்கின்  ஒலிபொங்க  
-  தனக்கு  உரிய
ஒப்பற்ற வயிரப் பூண்  அணிந்த. உள்சுழிகின்ற  (வெற்றிச்) சங்கின் ஒலி
பொங்கியெழவும்; பொற்றடமுடிப் புது வெயில் பொழிதரப் போய் -
பொன்னாலான  (தன்) அகன்ற  மணிமகுடம்  இளவெயில்  வீசச்சென்று;
நல்தவர் அனுச்சைகொடு நல்மனை புகுந்தான்
-சிறந்த முனிவர்களின்
இசைவைப்   பெற்றுக்கொண்டு    (தனக்குரிய)   சிறந்த  மாளிகைக்குச்
சென்றடைந்தான்.
 

நில  அரசர்கள் எழுந்து நின்று விடைதர. தவஅரசர்களைப் பணிந்து
நின்று  அனுமதி  வேண்டி  விடைபெற்றான்  எனக்   கூறி.  தசரதனின்
வீரமும்  அருளின்  ஈரமும் தோற்றுவித்த  திறம் உணர்க.  அனுச்சை -
அநுமதி. இசைவு.                                           42
 

1159.அன்னம் அரிதின் பிரிய.
   அண்ணலும் அகன்று. ஓர்
பொன்னின் நெடு மாட வரை
   புக்கனன்; மணிப்பூண்
மன்னவர் பிரிந்தனர்கள்;
   மா தவர்கள் போனார்;
மின்னு சுடர் ஆதவனும்.
   மேருவில் மறைந்தான்.