பக்கம் எண் :

740பால காண்டம்  

விண்ணுலகத்து  இன்பத்தை  மண்ணுலகிலேயே  அடைய  வைத்தது
சனகரின்   இனிய    விருந்து   உபசரிப்பு  எனச்  சனக   மன்னனின்
விருந்தோம்பலின் பெருமை தெரிவித்தவாறு. “உடம்பொடு  துறக்க  நகர்
உற்றவரை  ஒத்தார்”  என்பதனால்  அவ்வாறு  அடைதலின்  அருமை
தெரிவித்தார்.  நாவாரச்  சிறந்த அமுதுண்ணல்.  கண்கள் ஆரக்  கலை
நிகழ்ச்சிகள்  காண்டல்.  செவிகளார இனிய இசை  கேட்டல்  முதலியன
விண்ணுலகத்திலிருப்பதுபோல்   மிதிலையிலும்   நிகழ்ந்தன  என்பதாம்.
தவம்  புரிவோர்.  இம்மையிலே  துறக்க  இன்பம்   உறுவர்   என்பது.
“தவஞ்செய்   மாக்கள்  உடம்பு  இடாது  -  அதன்   பயன்  எய்திய
அளவைமான”   (பொரு.  91-92)   என்னும்   தொடரால்  அறியலாம்.
இவர்களை.  “சீவன் முக்தர்” என்பர். உடம்பொடு  துறக்கம்  உறுதலை.
“மெய்யினோடு  அருந்துறக்க  முற்றார் என  வியந்தான்”  (கம்ப. 10106)
எனவும்  “உடல்  உறு  பாசம்  வீசாது  உம்பர் செல்வாரும்  ஒத்தார்”
(கம்ப.  4750)  எனவும்  மேலும்  உரைப்பார். இதனைச் ‘சதேக  முத்தி’
என்பர்.                                                    1
 

                                  சீதையின் சிந்தையும் சொல்லும்
  

1161.தேட அரு நலத்த புனல் ஆசை தெறலுற்றார்.
மாடு ஒர் தடம் உற்று. அதனை எய்தும் வகை காணார்.
ஈடு அழிவுற. தளர்வொடு ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும். அந்நிலையள் ஆனாள்.

 

தேட   அருநலத்த  னல்    ஆசை    தெறல்     உற்றார்-
தேடிப்பெறுவதற்கு  அரியதான  தூய   நீரைப்பருகும்    வேட்கையால்.
வருத்தமுற்றவர்கள்; மாடு  ஒர்  தடம் உற்று அதனை எய்தும் வகை
காணார்    
-    அருகிலேயே   ஒரு   நீர்நிலை   இருக்கக்கண்டும்.
அந்நீர்நிலையில் (இறங்கும் படிகள்  இன்மையால்)  அதனை  அடையும்
வழிவகை  காணாதவராயின்.; ஈடு  அழிவுறத்  தளர்வொடு ஏமுறுவர்
அன்றே?  
-  தம்  வலிமை குன்றிச் சோர்வுற்றுக் கலக்கம்  அடைவார்
அன்றோ?; ஆடக  வளைக்  குயிலும்   அந்நிலையள்  ஆனாள் -
பொன்னலான   வளையல்கள்   அணிந்த  குயில் போன்ற  பிராட்டியும்
அந்த    நிலையினையடைந்து   (இராம    வேட்கையால்)    தவித்துக்
கலங்கினாள்.  

“நீர்   இன்றி அமையாது உலகு” (திருக். 20) ஆதலின். “தேட அரு
நலத்த   புனல்”   என்றார்.  மாற்றுத்  தேடற்கு   அரியதான   புனல்
எனினுமாம்.  இராமபிரான்  எனும்  அழகின்  தடாகம்  அருகிலிருந்தும்
திருமண  நிகழ்வுகள் முற்றுறாமையால். சீதை நுகர  இயலாமல்  தவித்த
தவிப்பை  அழகுற  விளக்கியவாறு.   உவமையணி.  ஓர் என்பது  சந்த
இன்பம்  நோக்கி   ஓர்  என  ஆயிற்று. பின் முன்  வருவனவற்றிற்கும்
இவ்வாறே  கொள்க.  ஏம்  உறல்  - கலக்கமுறல்.  வளையல் அணிந்த
மணிக்குயில்   ஒன்றிருந்தால்.   பிராட்டிக்கு   உவமையாம்   என்பார்.
“ஆடக     வளைக்குயில்”    என்றார்.     இல்பொருள்    உவமை.
ஆடகம்-கைவளை.                                          2
 

                                        சீதை இரவொடு கூறல்.
 

(வேறு) கலிவிருத்தம்
 
  

1162.“உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்” எனா.
கரவே புரிவார் உளரோ? கதிரோன்