பக்கம் எண் :

  கடிமணப் படலம்741


 
வரவே. எனை ஆள் உடையான் வருமே!-
இரவே! - கொடியாய். விடியாய்’ எனுமால்.

 

இரவே! கொடியாய்!- இரவுப்பொழுதே! கொடுமையை உடையாய்!;
உரவு  ஏதும் இலார்  உயிர் ஈதும்  எனா
- வலிமை சிறிதும் அற்ற
மெல்லியராகிய  பெண்டிர்க்கு  வாழ்வளிப்போம்  என்று  நினையாமல்;
கரவே  புரிவார்  உளரோ?
-  வஞ்சனை  புரிந்து  உயிர்வாங்குவார்
உள்ளனரோ?  (உள்ளனர்  என  உன்னால் உணர்ந்தேன்);  கதிரோன்
வரவே  எனை   ஆள்  உடையான்  வருமே!
-  நாளைப்பொழுது
புலர்ந்தவுடனே.  என்னை  ஆளாக  உடைய  எம்பெருமான்  இராமன்
(என்னருகே) வந்து விடுவானே!; விடியாய்! எனும் - விரைவில் விடிந்து
விடு!  (இன்றேல்  வீரர்க்கு வீரனாகிய  அவனைக் கொண்டு  உன்னைத்
தண்டிப்பேன்) என்று சீதை இரவை நோக்கிக் கூறினள்.  

காதல்  நோய் மாலை மலர்ந்து இரவில் காய்த்து வருத்துதல் இயல்பு.
காதல் நோயாளர்க்கு ஓர் இரவு பலயுகமாகத்  தோன்ற.  பேசாதவற்றிடம்
எல்லாம் பேசிப்புலம்பலும். கேளாதவற்றிடம் எல்லாம்  அவை  கேட்பது
போலப்  பேசலும்  இயல்பு  ஆகும்.  (தொல்.   பொருளியல். 2)  இனி
வருவனவற்றிற்கும்    இது    பொருந்தும்.   பெண்கள்    அபலைகள்
எனப்படுதலால்   “உரவு   ஏதும்   இலார்”   என்றார்.    துணையற்ற
பெண்களிடம் இகலுதல் என்ன வீரம்? என்பது குறிப்பு.             3
 

                                            நெஞ்சொடு கூறல்.
  

1163.கரு நாயிறு போல்பவர் காலொடு போய்.
வரு நாள். அயலே வருவாய்;- மன்னே!-
பெரு நாள். உடனே. பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?

 

மன்னே!-என் மனமே!;கரு நாயிறு போல்பவர் காலொடு போய்-
கரிய  நிறமுடைய ஒரு சூரியனைப் போன்ற  இராமனின்  திருவடியோடு
கூடவே  சென்று;  வரு  நாள் அயலே  வருவாய் - அவன் திரும்பி
வருகின்ற  நாளில்  (அவன்   காலோடேயே  திரும்பி)  என்  அருகில்
வருவதாக  இருக்கிறாய்!;பெருநாள்  உடனே  பிரியாது உழல்வாய்!-
நான்  பிறந்த  நாள்  தொட்டுப்  பலநாட்களாய்  என்னோடயே சுற்றித்
திரிந்து  வந்த  நீ!;ஒருநாள் திரியாது உழல்வார் உளரோ? (இன்னும்
ஒரு நாளில் நினைத்த பலன் கைகூட இருக்கையில்.  அந்த)  ஒரு நாள்
பொறுத்திருக்கமுடியாமல்(இத்தனை  நாள்.   கூட   வாழ்ந்திருந்தாரைக்)
கைவிட்டு   நீங்குவார்    (உன்னையன்றியுலகில்   வேறு   எவரேனும்
உளரோ?.  

‘ஆத்திரக்காரர்க்குப்  புத்தி மட்டு’ என்பாராதலின். ஒரு நாள்தரியாது
உழல்வதாக  மனத்தைச்   சாடினாள்   பிராட்டி.  உலகத்துப்பொருள்கள்
இராமன் திருமேனிக்கு ஒவ்வாமையுணர்ந்து. “கரு  ஞாயிறு  போல்பவர்”
என்று இல்பொருளை