பக்கம் எண் :

794பால காண்டம்  

பற்றியவாறு       நல்லனவெல்லாம்       கொண்ட      (தனக்குரிய)
மாளிகையினுள் சென்றான்.  

அவதார  நோக்கம் நிறைவேறுதற்குரிய ஒரு பெரும்பணி.  முதற்பணி.
எவ்வித  ஊறுமின்றி  இனிதே நிறைந்தமை  கொண்டு  முனிவர்  குழாம்
பெருமகிழ்வு   எய்தியது  என்பார்.   “மகிழ்ந்தார்   முற்றிய  மாதவர்”
என்றார்.  மண  மேடையில்.  நுழைந்ததுபோலவே.   அதனை  விட்டுச்
செல்கையிலும்  சான்றோரை மறவாமல்  வணங்குதல்  வேண்டும்  எனும்
மரபை  நினைப்பிப்பார்.  “மாதவர்  தாள்   முறைசூடி.  கொற்றவனைக்
கழல்  கும்பிடலோடும்” என்றார்.  பொற்றொடி -  அன்மொழித்தொகை;
பிராட்டியைக் குறித்தது.                                      92

                                            மங்கல ஆரவாரம்
  

1252.ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை.
 

ஆர்த்தன பேரிகள்- அப்பொழுது மங்கல பேரிகைகள் முழங்கின;
ஆர்த்தன  சங்கம்  
-  சங்க  வாத்தியங்கள்  முழங்கின;  ஆர்த்தன
நான்மறை  
- நான்கு வேதங்களும் முழங்கின; ஆர்த்தனர் வானோர்-
தேவர்கள்  (ஆனந்தத்தால்)  முழங்கினர்;  ஆர்த்தன பல்கலை - பல்
வகைக்கலைகளும்    ஆர்ப்பரித்தன;   ஆர்த்தன   பல்லாண்டு  -
பல்லாண்டு இசைகள் (எங்கும்) ஒலித்தன; ஆர்த்தன வண்டு இனம் -
(மலர்   மாலைகளில்    மொய்த்த)    வண்டினங்களும்   (இம்மகிழ்ச்சி
வெள்ளத்தில்  பங்கு  கொள்பவைபோல்)  ஆரவாரித்தன;   ஆர்த்தன
வேலை
- கடல்களும் (மகிழ்ச்சியில் பங்குபெற்று) ஆர்ப்பரித்தன!

உலகுக்கு     நலம் விளைக்கும்  பெருநிகழ்வுகள்  நிகழுங்காலத்தே.
இயற்கைக்   கூறுகளும்  பங்குபெறும்  எனக்குறிக்கும்   இலக்கிய  மரபு
பற்றி.  அறந்தலை  நிறுத்த  வந்த   மணம்  இதுவாதலின்.  “ஆர்த்தன
வண்டினம்;    ஆர்த்தன    வேலை”     என்றார்.     சொற்பொருட்
பின்வருநிலையணி.                                          93

                                      அன்னையரை வணங்குதல்
  

1253.கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.
 
  

கேகயன்    மாமகள்  கேழ்கிளர்  பாதம்  -  (இராமன்)  கேகய
மன்னனின்   மகளான    கைகேயியின்    ஒளிமிகுந்த   திருவடிகளை;
தாயினும்  அன்பொடு தாழ்ந்து வணங்கா
- (தன்னைப்பெற்ற) தாயான
கோசலையி