பக்கம் எண் :

  கடிமணப் படலம்795

னிடத்துக்     கொண்டுள்ள   அன்பைக்காட்டிலும்   மிகு  அன்புடனே
வீழ்ந்துவணங்கி;  ஆய  தன்  அன்னை அடித்துணை சூடி - (பின்பு)
தன்னைப்  பெற்ற தாயான  கோசலையின்  இணையடிகளைத்  தலைக்கு
அணியாகச்  சூடி. (வணங்கி); தூய சுமித்திரை தாள் தொழலோடும் -
(அதன்பின்பு)    உளத்    தூய்மை    மிக்கவளான    சுமித்திரையின்
திருவடிகளை வணங்கிய அளவிலே.  

இப்பாடல்     குளகம். அடுத்தபாடல்  கருத்தொடு  முடியும். “தாய்
கையில்  வளர்ந்திலன்; வளர்த்தது  தவத்தால்    கேகயன்  மடந்தை”
(யிடம்)  (கம்ப. 1591) என்பர் ஆதலாலும். இனிவரும்  அவதார  நோக்க
நிகழ்ச்சிகள்   யாவுக்கும்  இவள்  வித்தாவாள்   என   உணர்தலாலும்.
“தாயினும்  அன்பொடு தாழ்ந்து” கைகேயியை  வணங்கினான்  என்றார்.
அடியாரின்  ஏவல்  செய்தி  என  இராமனைக்   காப்பதற்காகத்   தன்
மகனைத்   தொடக்கத்திலிருந்தே    அர்ப்பணித்த  தூய   நெஞ்சினள்
ஆதலின். “தூய சுமத்திரை” என்றார்.  இராமனைப்  பயந்த எற்கு இடர்
உண்டோ?” (கம்ப. 1453) என்று தன் வாயால்  உரைத்தாள்  அல்லளோ.
மந்தரை  நுழையு  முன்  இந்த மாதரசி கைகேயி.  இதனால்  அன்றோ.
“என்னையீன்ற   எம்பிராட்டி”   (கம்ப.   10081)   என்று   பெருமான்
ஏத்தியதும்  என்க.  இறுதியில்  இராமபிரான் “தீயள்  என்று  நீ துறந்த
என்தெய்வம்” (கம்ப. 10079) என்றதும் உணர்க.                  94

                               சீதை பணிதலும் மாமியர் மகிழ்வும்
  

1254.அன்னமும். அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தனள்; சிந்தை உவந்தார்.
கன்னி. அருந்ததி. காரிகை. காணா.
‘நல் மகனுக்கு இவள் நல் அணி’ என்றார்.

 

அன்னமும்    அன்னவர்  அம்பொன்  மலர்த்தாள்   சென்னி
புனைந்தாள்  -  அன்னப்பெடை   போன்ற   சீதையும்.  அத்தேவிமார்
மூவரின்   அழகிய    பொன்போல்   அருமையான   திருவடித்தாமரை
மலர்களைத்   தன்   தலைக்கு   அணியாகக்கொண்டு   வணங்கினாள்;
சிந்தை   உவந்தார்   
-   (அப்போது  அவர்கள்  மூவரும்)  சிந்தை
மகிழ்ந்தவர்களாகி; கன்னி அருந்ததி காரிகை காணா - கற்பழிவில்லாத
அருந்ததி   போன்ற  அழகிய  மங்கையாகிய   சானகியைப்   பார்த்து;
நல்மகனுக்கு இவள் நல் அணி என்றார்
-‘நம்’ சிறப்பிற்குரிய (செல்வ)
மகனுக்கு. இச்சீதை சிறப்பிற்குரிய அணிகலம் ஆவாள்’ என்றனர்.  

மாமியர்   மூவரும். மணமக்கள் பொருத்தம் தோன்ற. “நல் மகனுக்கு
இவள்   நல்  அணி”  என்றார்.  நம்  நல்  மகனுக்கு   இவள்  நல்ல
அணிகலமாகி   அழகு   கூட்டுவாள்    எனப்   பிராட்டியின்  ஏற்றம்
கூறியவாறுமாம். சீதை. இராமன் வாழ்வுக்கு  அழகூட்டுவாள்  என்பதாம்.
காணா - கண்டு. செய்யா என்னும் வினையெச்சம்.                 95
 

1255.சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்.
‘அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்