பக்கம் எண் :

  கடிமணப் படலம்797

கால்கடல்   போல் கருணைக்கடல் - (நீர்பொங்கும்) கருநிறமுள்ள
கடல்  அனைய  கருணைபொங்கும் கடலாகிய இராமபிரான்;  நூல்கடல்
அன்னவர்   சொல்   கடன்   நோக்கி   
-   கடல்   போன்றுள்ள
நூல்களைக்கற்று      உயர்ந்த      பெரியோர்கள்      சொல்லியுள்ள
(சாத்திரங்களது)   சொற்களின்   முறைமையை    நோக்கி;  மால்கடல்
பொங்கும்  மனத்தவளோடும்  
- கடல் எனப்பொங்கும் ஆசையுடைய
மனத்தவளாகிய   சீதையோடும்;   பண்டைப்  பாற்கடல்  ஒப்பதோர்
பள்ளியடைந்தான்  
-  தொன்று  தொட்டுத்  தான்  பள்ளிக்கொள்ளும்
பாற்கடலில் உள்ள  ஆதிசேடப்பள்ளி  போன்றதொரு  திருப்பள்ளியைச்
சென்றடைந்தான்.  

கடலில்  நீர் பொங்கும்;பெருமான் உள்ளத்தில் கருணை பொங்கும்.
கடல்  நீருக்கு  அளவு  இல்லைபோல.  இவன்  உள்ளத்திற் பொங்கும்
கருணைக்கும்     அளவில்லையென்க.     கருணை    அலையடிக்கும்
கண்ணாளன் என்பார். “கார்க்  கடல்  அன்ன கருணைக்கடல்” என்றார்.
கால்  -  கருமை:  காற்றுமாம்  -  இராமபிரான்   கருணையின்  கடல்;
பிராட்டியோ  அவன்  மேல்  வைத்த அன்பின் கடல்  என்பார்  “மால்
கடல்  அன்ன  மனத்தவளோடும்”   என்றார்.  தெய்வத்  தம்பதியர்க்கு
இச்சடங்குகள்  எல்லாம் தேவையோ  என்னும்  வினாவை  ஆசங்கித்து.
மக்கள்   வாழ.   வாழ்ந்து  காட்டப்பிறந்தவன்   ஆதலின்.   கற்றோர்
சொற்படி  நடந்தான்  என்பார்.  “நூல்கடல்   அன்னவர்   சொற்கடன்
நோக்கி” என்றார்.                                          98

                              மங்கல அங்கி வசிட்டன் வளர்த்தல்
 

1258.பங்குனி உத்தரம் ஆன பகற்போது.
அங்க இருக்கினில். ஆயிர நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்.
மங்கல அங்கி. வசிட்டன் வகுத்தான்.

 

பங்குனி   உத்தரம் ஆன பகல்போது- பங்குனி மாதத்து உத்திர
நட்சத்திரம்   கூடியுள்ள  பகற்  பொழுதிலே;  ஆயிர  நாமச்   சிங்க
மணத்தொழில்  செய்த  திறத்தால்
- ஆயிரந்திருப்பெயர்களையுடைய
சிங்கமே   போன்ற   இராமனது   திருமணச்   சடங்குகளைச்   செய்து
முடித்ததிறங்கூடிய;   வசிட்டன்   -   வசிட்ட  மாமுனிவன்;   அங்க
இருக்கினில் மங்கல  அங்கி வளர்த்தான்
- உப அங்கங்களையுடைய.
வேதவிதிப்படி. மங்கலகரமான ஓமாக்கினியை வளர்த்தான்.  

“தாள்கள்     ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்” (திருவாய். 8.1.10)
என்பவாதலின் ஆயிர நாமச் சிங்கம் என்றார். உத்திர  நாளோடு  கூடிய
பௌர்ணமியன்று   திருமணம்  நிகழ்ந்து  முடிந்தபின் மணவேள்வியைத்
தொடங்கிய வசிட்டபகவானே அதனை மங்கலமாக  முடித்து  வைத்தான்
என்க. இராம நாமம் ஒன்றே. திருமாலின்  ஆயிரம்  நாமங்கட்கும்  சமம்
என்பது   சகச்சிர   நாமத்தின்   இறுதித்    துதியாதலால்.    “ஆயிர
நாமச்சிங்கம்” என்றார் எனினுமாம்.

மங்கல   அங்கி  வளர்த்தல்  வேள்வியில்  மங்களகரமாக  ஓமத்தீப்
பொங்கியெழுமாறு பூரணாகுதி வழங்கல்.                        99