பக்கம் எண் :

  கடிமணப் படலம்799

                      மிதிலையில் தசரதன் சில நாள் தங்கியிருத்தல்
  

1261.வேட்டு அவர் வேட்டபின். வேந்தனும். மேல்நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்.
ஈட்டிய மெய்ப் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டளவு ஈந்தான்.

 

அவர்     வேட்டு   வேட்டபின்  -   அவர்கள்   அனைவரும்
(ஒருவர்க்கொருவர்)    விரும்பி    மணஞ்செய்து    கொண்ட  பின்பு;
வேந்தனும்  
-   சனக   மன்னனும்;  மேல்நாள்  கூட்டிய  கீர்த்தி
கொடுத்திலன்  அல்லால்  
- முன்னே. பல்லாண்டுகளாகத் தான் ஈட்டி
வைத்திருந்த      புகழ்      ஒன்றை      மட்டுமே      கொடாமல்
வைத்துக்கொண்டானே  அல்லாமல்; ஈட்டிய மெய்ப்பொருள் உள்ளன
எல்லாம்   
-   தான்  இத்துணைக்  காலமும்  சத்தியத்தோடு   ஈட்டி
வைத்திருந்த  அத்தனை  பொருள்களையும்;  வேட்டவர்  வேட்டவை
வேண்டு  அளவு ஈந்தான்
- விரும்பினவர் விரும்பினவற்றையெல்லாம்
அவர்கள்   விரும்பும்    அளவும்   (பெறுக   எனக்)   கொடையாகக்
கொடுத்தான்.  

இராமன்    முன்னமே சீதையை கன்னிமாடத்தில் கண்டு.  விரும்பிய
பின்பு.  காதல்  மணம்  புரிந்தான்   எனக்கூறிய   தமிழ்  மரபுக்கேற்ப.
தம்பியர்    மணங்களும்   ஒருவர்க்கொருவர்    விரும்பிய    பின்பே
நிகழ்ந்தன என்பார். “வேட்டு அவர் வேட்டபின்” என்றார்.  

கீர்த்தி     - மிகுபுகழ்.   கொடுப்பவன்   மிகுபுகழை  எக்காரணம்
கொண்டும் கொடுக்க இயலாது; கொடுக்கக் கொடுக்க   து  மிகுமாதலின்.
“கூட்டிய   சீர்த்தி   கொடுத்திலன்    அல்லால்”   என்று   அழகுறக்
கூறினார்.                                                 102
 

1262.ஈந்து. அளவு இல்லது ஒர் இன்பம் நுகர்ந்ததே.
ஆய்ந்து உணர் கேள்வி அருந் தவரோடும்.
வேந்தனும். அந் நகர் வைகினன்; மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்;
 

வேந்தனும்   - தசரதச்சக்கரவர்த்தியும்; ஈந்து அளவு இல்லது ஒர்
இன்பம்  நுகர்ந்ததே  
-  (சனகனைப்போலவே)  கொடை   கொடுத்து.
அதனால்  வரும்  எல்லையற்றதும்   ஒப்பற்றதும்  ஆகிய   இன்பத்தை
நுகர்ந்து; ஆய்ந்து உணர்  கேள்வி  அருந்தவரோடும் - ஆராய்ந்து
உணரும்   கேள்விச்   செல்வத்தையும்.   அரிய   தவச்செல்வத்தையும்
உடைய  முனிவர்களுடனே (அளாவி மகிழ்ந்து); அந்நகர் வைகினன் -
அந்த  மிதிலை  நகரத்திலே  தங்கியிருந்தனன்;  நாள் சில  மெள்ளத்
தேய்ந்தன
- சில நாட்கள் மெல்லக் கழிந்தன; செய்தது உரைப்பாம் -
அதன்பின்பு நிகழ்ந்ததை (இனிமேல் வரும் படலத்தில்) கூறுவோம்.