சனகன் தரு(¬)தயலும்- சனகன் தந்த பெண்ணாகிய சீதையும்; தான் ஆவது ஒர் வகையே நனி நானா விதம் உறு போகமும் - இராமனும். எடுத்த அவதாரத்திற்கேற்ப மிகுதியான பல்வகைப் போகங்களையும்; நுகர்கின்ற அந்நாள் வாய் -அநுபவிக்கின்ற அக்காலத்திலே; முனிகோசிகன் ஆனாமறை நெறி ஆசிகள் அருளி - நெறி நன்கு உணர்ந்த விசுவாமித்திர முனிவன் அழியாத வேத ஆசிகளை (மணமக்களுக்கு) அருளிச்செய்து விட்டு; போனான் - புறப்பட்டான்; வடதிசைவாய் உயர் பொன்மால் வரை புக்கான் - வடக்குத் திசையில் சென்று உயர்ந்தோங்கிய அழகிய பெருமலையாகிய இமயமலையை (தவஞ்செய்தற் பொருட்டுச்) சென்றடைந்தான். “தானும்” என்பதில் உள்ள உம்மை தொக்குத் “தான்” என் நின்றது. அது. இராமனைக் குறித்தது. 1 தயரதனின் அயோத்தி புறப்பாடு |