இடையூறு ஒன்று இப்பொழுதே வரும்; அது நன்றாய் விடும் என்றான் - (வந்த விரைவிலேயே) அவ்விடையூறு நன்றாகவும் முடிந்துவிடும் என்று கூறினான். நிமித்தம் - காரணம். சகுனத்தின் காரணங்களை அறிந்து கூறுவான் நிமித்திகன் ஆதலின். அவனை “நெறியுணர்வான் நினைவாளன்” என்றார். அழையா - செய்யா என்னும் வினை எச்சம். காகம் முதலியன இடம் ஆதலின். இடையூறு வரும் என்றும். மயில் முதலிய வலம் ஆதலின் அது நன்மையாய் முடியும் என்றும் நிமித்திகன் கூறினான். 6 பரசுராமனது வருகையும். தசரதன் சோர்வும் |