பக்கம் எண் :

  பரசுராமப் படலம்809

போரின்   மிசை எழுகின்றது- போர் எழுந்தால் எழுகின்றதாகிய;
ஒர்  மழுவின்  சிகை  புகைய  
-  ஒப்பற்றதான  அவன் கோடரியின்
உச்சியில்  புகை எழவும்; தேரின்மிசைமலைசூழ் வரு கதிரும் - தனது
ஒற்றைச்  சக்கரத் தேரில் ஏறி.  மேருமலையை  வலம்வரும்  கதிரவனும்;
திசை  திரிய
-  (இவனது  உக்கிரத்தால்)  திசைதடுமாறிச்  செல்லவும்;
நீரின்  மிசை வடவைக்கனல்  
- கடல் நீரின் மேலெழுந்து தோன்றும்
தன்மையதான  வடவாமுகாக்கினியும்;  நெடுவான் உற முடுகி - நீண்ட
வானளாவ  விரைந்து; பாரின்  மிசை வருகின்றது ஒர்படி - (எழுந்து)
பூமியின்  மேலே  (நடந்து) வருகின்றதொரு விதம்  போல;  வெஞ்சுடர்
படர
- தன் உடலிலிருந்து வெம்மை ஒளி வீசவும்-

யுக முடிவில்.  கடலில்  குதிரை  முகவடிவில்  எழும் பெருந்தீயால்
உலகு    அழியும்    என்பதும்    அத்தீயை   வடவா    முகாக்கினி
என்றழைப்பதும்  புராண  மரபு  ஆதலின்.  “நீரின்   மிசை  வடவைக்
கனல் நெடுவானுற முடுகி. பாரின் மிசை வருகின்றது  ஒர்படி”  என்றார்.
புயல்  எழுகையில்  கடல் அலைகளின் உச்சியில் தீ  எழும்   என்பதை
இன்றைய  அறிவியல்  ஆந்திரப் புயலில் கண்கூடாகக்  கண்டு உணரத்
தொடங்கியுள்ளமை குறிக்கொள்ளத்தக்கது.  குதிரையினுடைய -  கழுத்து
வளைவு  போல. கடல் அலைகள் உச்சி  வளைத்து வருவதால்  குதிரை
முகத்திற்கு  அதனை  உவமிப்பது   பொருந்துவது  காண்க.   தம்மைத்
தற்குறிப்பேற்ற  அணி.  சிகை  புகைய. திசை திரிய.  கனல்  நெடுவான்
உற முடுகி. வருகின்றது ஒர்படி வெஞ்சுடர் படர எனக் கூட்டுக.      10
 

1273.பாழிப் புயம் உயர் திக்கிடை
   அடையப் புடை படர.
சூழிச் சடைமுடி விண் தொட.
   அயல் வெண் மதி தோற்ற.
ஆழிப் புனல். எரி. கால். நிலம்.
   ஆகாயமும். அழியும்
ஊழிக் கடை முடிவில். திரி
   உமை கேள்வனை ஒப்பான்;
 

பாழிப்     புயம்-  வலிமைவாய்ந்த  தோள்கள்;  உயர்திக்கிடை
அடையப்புடை   படர   
-  உயர்ந்த  திக்குகளின்  எல்லையிடையே
சென்றடையுமாறு  பக்கங்கள்  விரியவும்;  சடைமுடிச்  சூழி விண்முடி
தொட   
-   சடையை  முடித்துக்  கட்டிய  தன்  உச்சி   விண்ணின்
முகட்டைத் தொடவும்; வெண்மதி அயல் தோன்ற - வெண்ணிறமுள்ள
நிலா முடியின் அருகிலே தோன்றவும்; ஆழிப்புனல். எரி. கால். நிலம்.
ஆகாயமும் அழியும் ஊழிக் கடை முடிவில்
- கடல் வடிவான நீரும்.
நெருப்பும்.  காற்றும்.  நிலமும்.  வானமும்  ஆகிய (பஞ்ச  பூதங்களும்)
அழிகின்ற  ஊழியாகிய  யுகமுடிவுக் காலத்தில்; திரிஉமை  கேள்வனை
ஒப்பான்    
-    நடம்புரிகின்ற   உமையம்மையின்    மணாளனாகிய
சிவபெருமானை ஒப்பான் ஆகவும் -