மிகைப் பாடல்கள் காப்பு |
1. | ஒன்று ஆய். இரண்டு சுடர் ஆய். ஒரு மூன்றும் ஆகி. பொன்றாத வேதம் ஒரு நான்கொடு. ஐம் பூதம் ஆகி. அன்று ஆகி. அண்டத்து அகத்து ஆகி. புறத்தும் ஆகி. நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம். |
ஒன்றாய் - பரம்பொருள் ஒன்றால்; இருசுடர் - பரிதி. மதி என்று இருசுடர்;ஒரு மூன்று - பிரமன்-திருமால்-சிவன்; பொன்றாத வேதம் - அழியாத வேதம்; அன்று - இல்லை; நீள்கழல் - நெடிய பாதம். |
2. | நீலம் ஆம் கடல். நேமி அம் தடக் கை மாலை மால் கெட. வணங்குதும் மகிழ்ந்தே. |
நீலம் ஆம் கடல் - கடல் போன்ற நீல நிறமும்; நேமி அம் தடக்கை - திரு வாழி ஏந்திய நீண்ட கைகளையும் உடைய; மாலை - திருமாலை; மால்கெட - மயக்கம் நீங்க; மகிழ்ந்து வணங்குதும் - மகிழ்ந்து வணங்குவோமாக. |
3. | காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை. மேய நான்மறை தொழ. விழித்து உறங்கிய மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம். |
கடு - நஞ்சு; விழித்து உறங்கல்- அறிதுயில்; ஆயிரம் பணா முடி - ஒப்பு பரிபாடல். ‘கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிறு’ முருகாற்றுப்படை; மாயன் - கரியன்; மாயம் வல்லவன். |