பக்கம் எண் :

100அயோத்தியா காண்டம்

தயரதனுக்குப் பயந்து; அக்கனி வாய்ச் சீதை தந்தை- அந்தக் கொவ்வைக்
கனிபோலச்சிவந்த வாயையுடைய சீதையின் தந்தையாகிய சனகன்;  உன்
தாதையைத் தெறுகிலன் -
உன்னுடையதந்தையாகிய கேகய ராசன் மீது
படையெடுத்து அழித்திலன்;  அவன் இராமன் மாதுலன் - அந்தசனகன்
இராமனுக்கு மாமன்;  நுந்தைக்கு இனி வாழ்வு உண்டோ!? - (இராமன்
சக்கரவத்தியானால்சனகன் கை ஓங்கிவிடும்) உன் தந்தையாகிய கேகயனுக்கு
இனி வாழ்வு உண்டா? (அழிவுதான்); உன்துணை- உன்னளவுக்கு; பழிபடப்
பிறந்தார் யார் உளர்? -
பழி உண்டாகும் படி பிறந்தவர்கள்யார்
இருக்கின்றார்கள்’ (ஒருவரும் இல்லை).

     புகழ் இல்லாமற் போனாலும் போகட்டும் என்றால், பழியல்லவா
உண்டாகும் போல் உள்ளதேஎன்றாள் கூனி, தசரதனுக்குக் கட்டுப்பட்டு
சனகன் சும்மா இருக்கிறான்; எதிர்காலத்தில் இராமன்அரசனானால் சனகன்
சும்மா இரான் என்றாள். சனகனுக்கும் கேகயனுக்கும் இயற்கையில் பகை
உண்டு என்பதும்இதனால் விளங்கும்.                             82

1481.‘மற்றும் நுந்தைக்கு வான்
     பகை பெரிது உள; மறத்தார்
செற்றபோது, இவர் சென்று
     உதவார் எனில், செருவில்
கொற்றம் என்பது ஒன்று,
     எவ் வழி உண்டு? அது கூறாய்!
சுற்றமும் கெட, சுடு துயர்க்
     கடல் விழத் துணிந்தாய்!

     ‘மற்றும்- மேற்சொல்லியதன்மேலும்; நுந்தைக்கு - உன் தந்தையாகிய
கேகயனுக்கு;வான் பெரிது  பகை உள - மிகப் பெரிய பகைகள்
இருக்கின்றன;  மறத்தார் - அப்பகைவர்கள்; செற்ற போது - (உன்
தந்தையை அழிக்கப்) போரிட முனைந்தபோது;  இவர்- கோசல நாட்டார்;
சென்று உதவார் எனில் - (உன் தந்தைக்கு உதவி யாகச்) சென்றுபோரில்
உதவாவிட்டால்; செருவில் - சண்டையில்;  கொற்றம் என்பது  ஒன்று -
வெற்றி என்பதாகிய ஒன்று; எவ்வழி உண்டு? - எப்படி எவ்விதத்தில் (உன்
தந்தைக்கு)உண்டாகும்; அது கூறாய் - அந்த வழியைச் சொல்லு (ஆகவே);
சுற்றமும் கெட - உறவின்முறையாரும் அழிய; சுடு துயர்க்கடல் விழ -
சுடுகின்ற துன்பக் கடலில் (நீயும்) விழுவதற்கு;துணிந்தாய் - உறுதி
கொண்டு விட்டாய் ( போலும்).’

     இறுதி வரியை விளியாகவும் கொள்ளலாம். சனகன் போர்
செய்யாவிடினும்வேறு அரசர்கள் உன் தந்தையோடு போர்செய்ய வரின்
இராமன் உதவ வருவானோ? வாரான். எனவே, நீஉன் குலத்தையும் அழிக்க
வழி செய்து