ஒலியும் அஞ்சப்பெற்ற அழகிய மொழியையுடைய கைகேயியின் மாளிகைக்கு; வந்தான் - வந்தடைந்தான். மறுநாள் இராமனுக்கு முடிசூட்டுவதற்குரிய விழா எற்பாடுகளைச் செய்வதில் காலம் கழிந்தமையால்இரவில் காலந் தாழ்த்துக் கைகேயியின் இருப்பிடம் நோக்கி மகிழ்ச்சியோடு தயரதன் சென்றான். ஏழை - பெண்; பிறர் பேச்சைக் கேட்டு ஆராயாது நடத்தலின் அறிவில்லாதவள் என்னும் குறிப்பும் புலப்பட வைத்தார். மடங்கல் - பிடரிமயிர் மடங்கியிருக்கப் பெற்றது; காரணப் பெயர். 5 1496. | வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு, ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி, பாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள், ஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன். |
மன்னர் வணங்கி வாயிலில் நிற்ப - தன்னுடன் வந்த அரசர்கள் தொழுது அந்தப்புரவாயிலில் நிற்க; ஆங்கு வந்து - அவ்விடத்தில் ஓடிவந்து; ஏயின செய்யும் மடந்தைமாரொடுஏகி - கட்டளையிட்ட வற்றைச் செய்யும் பணிப்பெண்களோடு சென்று; பாயல் துறந்த - படுக்கையைவிட்ட; படைத் தடங் கண் - வேல் போலும் கூரிய பெரிய கண்களையும்; மெல்தோள்- மென்மையான தோள்களையும் உடைய; ஆய் இழைதன்னை - கைகேயி; அடைந்த ஆழிமன்னன்- சேர்ந்த அந்தச் சக்கரவர்த்தி (எடுக்கலுற்றான் என அடுத்த பாடலோடு முடியும்) தயரதன் மாளிகையின் உள்ளே சென்று, தரையிலே அலங்கோலமாகக் கிடந்த கைகேயியைக் கண்டான்என்பது கருத்து. அந்தப்புரத்தில் அயல் ஆடவர் செல்ல இயலாதாகலின் மன்னர் வெளியே நின்றனர். ஆயிழை - பெண் என்னும் பொருட்டாய் நின்றது, கைகேயி அணிகலன்களைத் துறந்து கிடத்தலின். 6 கைகேயியைத் தயரதன் எடுத்தலும், அவள் மண்ணில் வீழ்தலும் 1497. | அடைந்து , அவண் நோக்கி, ‘அரந்தை என்கொல் வந்து தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன், மடந்தையை, மானை எடுக்கும் ஆனையேபோல், தடங்கை கள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான். |
|