பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 113

     அவண் அடைந்து - அங்குச் சென்று;  நோக்கி - கைகேயியின்
நிலையைக் கூர்ந்துபார்த்துத் (துணுக்கம் கொண்டு); அரந்தை என் கொல்
வந்து  தொடர்ந்தது  என -
துன்பம்யாது வந்து சேர்ந்தது  என்று
எண்ணி;  துயர்கொண்டு சோரும் நெஞ்சன் - வருத்தமடைந்து வாடும்
மனமுடையவனாய்; மானை எடுக்கும் ஆனையே போல் - பெண்மானைத்
துதிக்கையால் யானையைப்போல;  தடங்கைகள் கொண்டு - தன் பெரிய
கைகளால்;  மடந்தையைத் தழீஇ - அவளைக் கட்டித் தழுவி;  எடுக்கல்
உற்றான் -
தூக்கத் தொடங்கினான்.

1498.நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,
மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்.
ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள் -
மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.

     மன்றல் அருந் தொடை மன்னன் - மணங் கமழும் அரிய மலர்
மாலையைச் சூடியதயரதனுடைய; ஆவி அன்னாள் - உயிர் போன்ற
வளான கைகேயி;  நின்று - தன் நிலையில்மாறாது நின்று;  தொடர்ந்த -
தன்னைத் தழுவ நீண்ட;  நெடுங் கை தம்மை நீக்கி -(அரசனுடைய)
நீண்ட கைகளை விலக்கி;  மின் துவள்கின்றது  போல - மின்னற் கொடி
துவண்டுவீழ்தல் போல; மண்ணில் வீழ்ந்தாள் - தரையில் வீழ்ந்து;
ஒன்றும் இயம்பலள் -ஒன்றும் சொல்லாமல்; நீடு உயிர்க்கல் உற்றாள்-
பெருமூச்சு விடத் தொடங்கினாள்.

     தேவியர் மூவரில் கைகேயியை தயரதன் மிகவும் விழைந்தான் என்பது
‘மன்னன் ஆவி அன்னாள்’என்னும் தொடரால் விளங்குகிறது.  மன்னன்
துயர் கண்டும் அவள் நெஞ்றசு இளகாமல் இருந்தது தோன்ற‘நின்று’
என்றார்.  வீழ்ந்தாள்,  இயம்பலள் - முற்றெச்சங்கள்.                  8

தயரதன் கைகேயியை நிகழ்ந்தது கூறப் பணித்தல்  

1499.அன்னது கண்ட அலங்கல்
     மன்னன் அஞ்சி,
‘என்னை நிகழ்ந்தது?’
     இவ் ஏழு ஞாலம் வாழ்வார்,