| உன்னை இகழ்ந்தவர் மாள்வர்; உற்றது எல்லாம் சொன்னபின் என் செயல் காண்டி; சொல்லிடு’ என்றான். |
அன்னது கண்ட - கைகேயியின் அந்தச் செயலைப் பார்த்த; அலங்கள் மன்னன் -மாலையைப் பூண்ட அரசன்; அஞ்சி - அச்சம் உற்று; ‘நிகழ்ந்தது என்னை - நடந்தது யாது; இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார் - இவ்வேழுலகங்களில் வாழ்பவர்களுள்; உன்னைஇகழ்ந்தவர் மாள்வர் - உன்னை இழிவுபடுத்தியவர் எவராயிருந்தாலும் என்னால் கொல்லப்பட்டுஅழிவர்; உற்றது எல்லாம் - நிகழ்ந்தது அனைத்தையும்; சொன்ன பின் - நீகூறிய பிறகு; என் செயல் காண்டி - என் செய்கையைப் பார்; சொல்லிடு - காலந்தாழ்த்தாதுசொல்வாய்;’ என்றான்- என்று சொன்னான். இப்பாட்டு, தயரதன் கைகேயியின் அலங்கோல நிலையினைக் கண்டு, கொண்ட துணுக்கத்தினையும்அவள்மீது கொண்ட காதலால் அவளைத் தேற்ற முயலுதலையும் காட்டுகிறது. என்னால் கொல்லப்படுவர்என்பான் மாள்வர் எனத் தன்வினையால் கூறினான். சொல்லிடு; இடு- துணைவினை. 9 கைகேயி வரம் வேண்டுதல் 1500. | வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை, கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப, ‘உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின், பண்டைய இன்று பரிந்து அளித்தி’ என்றாள். |
வண்டு உளர்த தாரவன் - வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த அரசனது; வாய்மை கேட்ட மங்கை - சொற்களைச் செவியுற்ற கைகேயி; நெடுங் கணின் கொண்ட ஆலி- நீண்ட கண்களில் கொண்ட நீர்த்துளிகள்; கொங்கை கோப்ப - மார்பில் வீழ(அமுது கொண்டு); ‘என்கண் அருள் உன்கண் ஒக்கின் - உன்னிடத்தில் உள்ள தானால்; பண்டைய - முன்னே எனக்குக் கொடுத்தவற்றை; பரிந்து அளித்தி - அன்புகொண்டுஅளிப்பாய்;’ என்றாள் - என்ற சொன்னாள். இப் பாட்டில் கைகேயி நயமாகப் பேசித் தயரதனது சூளுரையைப் பெறவகை செய்கிறாள். ‘நெடுங்கணின் கொண்ட ஆலி’ என மாற்றில் கூட்டுக. |