பக்கம் எண் :

114அயோத்தியா காண்டம்

 உன்னை இகழ்ந்தவர் மாள்வர்;
     உற்றது எல்லாம்
சொன்னபின் என் செயல் காண்டி;
     சொல்லிடு’ என்றான்.

     அன்னது கண்ட - கைகேயியின் அந்தச் செயலைப் பார்த்த;
அலங்கள் மன்னன் -மாலையைப் பூண்ட அரசன்;  அஞ்சி - அச்சம்
உற்று;  ‘நிகழ்ந்தது என்னை - நடந்தது யாது;  இஞ் ஞாலம் ஏழில்
வாழ்வார் -
இவ்வேழுலகங்களில் வாழ்பவர்களுள்;  உன்னைஇகழ்ந்தவர்
மாள்வர் -
உன்னை இழிவுபடுத்தியவர் எவராயிருந்தாலும் என்னால்
கொல்லப்பட்டுஅழிவர்;  உற்றது எல்லாம் - நிகழ்ந்தது அனைத்தையும்;
சொன்ன பின் - நீகூறிய பிறகு; என் செயல் காண்டி - என்
செய்கையைப் பார்; சொல்லிடு - காலந்தாழ்த்தாதுசொல்வாய்;’ என்றான்-
என்று சொன்னான்.

     இப்பாட்டு, தயரதன் கைகேயியின் அலங்கோல நிலையினைக் கண்டு,
கொண்ட துணுக்கத்தினையும்அவள்மீது கொண்ட காதலால் அவளைத்
தேற்ற முயலுதலையும் காட்டுகிறது. என்னால் கொல்லப்படுவர்என்பான்
மாள்வர் எனத் தன்வினையால் கூறினான். சொல்லிடு; இடு- துணைவினை. 9

கைகேயி வரம் வேண்டுதல்  

1500.வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,
கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப,
‘உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின்,
பண்டைய இன்று பரிந்து அளித்தி’ என்றாள்.

     வண்டு உளர்த தாரவன் - வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த
அரசனது; வாய்மை கேட்ட மங்கை - சொற்களைச் செவியுற்ற கைகேயி;
நெடுங் கணின் கொண்ட ஆலி- நீண்ட கண்களில் கொண்ட
நீர்த்துளிகள்; கொங்கை கோப்ப - மார்பில் வீழ(அமுது கொண்டு);
‘என்கண் அருள் உன்கண் ஒக்கின் - உன்னிடத்தில் உள்ள தானால்;
பண்டைய - முன்னே எனக்குக் கொடுத்தவற்றை;  பரிந்து அளித்தி -
அன்புகொண்டுஅளிப்பாய்;’ என்றாள் - என்ற சொன்னாள்.

     இப் பாட்டில் கைகேயி நயமாகப் பேசித் தயரதனது சூளுரையைப்
பெறவகை செய்கிறாள். ‘நெடுங்கணின் கொண்ட ஆலி’ என மாற்றில்
கூட்டுக.