பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 115

பண்டைய என்றது - சம்பரனோடு போர் நிகழ்ந்தபோது கைகேயி
உதவியதற்குத் தயரதன் மகிழ்ந்து கொடுத்த வரம் இரண்டையும்  குறித்தது.
பண்டைய - பலவின்பால் பெயர். தன் தருத்தை அறிந்தபின்னர் அரசன்
அதற்கு உடன்படுதல் அரிதாகலின் ‘பரிந்து அளித்தி’ என்றாள்.        10

தயரதன் வாக்குறுதி அளித்தல்  

1501.கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,
வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மின்ன நக்கான்;
‘உள்ளம் உவந்துள செய்வென்; ஒன்றும் லோபேன்;
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை’ என்றான்.

     கள் அவிழ் கோதை- தேன் வழியும் கூந்தலையுடைய கைகேயியினது;
கருத்து உணராதமன்னன் -  எண்ணத்தை அறியாத தயரதன்;  வெள்ள
நெடுஞ் சுடர் மின்னின் -
மிகுந்தபேரொளியையுடைய மின்னல்போல;
மின்ன நக்கான்- விளங்கும்படி சிரித்து; ‘உள்ளம்உவந்துள செய்வேன்-
உன் மனம் விழைந்தனவற்றைச் செய்வேன்;  ஒன்றும் லோபேன் -அதில்
சிறிதும் உலோபம் செய்யேன்;  உன் மைந்தன் - நினக்கு மகனும்; 
வள்ளல் -
பெருவள்ளுலுமான; இராமன் ஆணை - இராமன்மேல்
சத்தியம்;’ என்றான் -.

     கைகேயியின் உபாயம் பயன் தந்தது இதனால் கூறப்பட்டது.  தயரதன்
நகைபிறர் பேதைமையான்எழுந்தது. கைகேயி இந்நாள்வரை இராமனிடம்
பேரன்புடையவன் என்னும் உறுதியால் ‘ உன் மைந்தன்இராமன்’ என்றான்.

     கள்ளவிழ் கோதை; அடையடுத்த ஆகுபெயர். லோபம் - வடசொல்;
ஈயாமை என்பதுபொருள்.                                      11

கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல்  

1502.ஆன்றவன் அவ் உரை கூற, ஐயம் இல்லாள்,
‘தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,
சான்று இமையோர்குலம் ஆக, மன்ன! நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி’ என்றாள்.

     ஆன்றவன் - குணங்களால் நிறைந்த தயரதன்; அவ் உரை கூற -
அந்த உறுதிமொழியைச்சொல்ல; ஐயம் இல்லாள் - தன் கருத்து
நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி;‘மன்ன - அரசனே;
தோன்றிய பேர் அவலம்  துடைத்தல் உண்டேல் - எனக்கு