தயரதன் உற்ற பெருந் துயர் 1514. | இந்த நெடுஞ் சொல் அவ் ஏழை கூறும் முன்னே, வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப, சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்;- மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன். |
மைந்தன் அலாது - மகனாகிய இராமனைத் தவிர; உயிர் வேறு இலாத மன்னன் -தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத அரசனாகிய தயரதன்; அவ் ஏழை - அந்த அறிவற்றவளானகைகேயி; இந்த நெடுஞ் சொல் கூறும் முன்னே - இந்தப் பெரிய வஞ்சினத்தைச்சொல்லிமுடிக்கு முன்னே; வெந்த கொடும் புணில் - முன்பே தீயினால் சுட்ட கொடிய புண்ணில்;வேல் நுழைந்தது ஒப்ப - கூரிய வேல் பாய்ந்தாற்போல; சிந்தை திரிந்து -மனம் தடுமாறி; திகைத்து - அறிவு மயங்கி; அயர்ந்து வீழ்ந்தான் - சோர்ந்துதரையில் சாய்ந்தான். 1515. | ‘ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; ‘அந்தோ! ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும் சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும் - மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். |
மாகமும் நாகமும் மண்ணும் - மேலுலகத்தையும் கீழுலகத்தையும் நிலவுலகத்தையும்; வென்ற வாளான்-வெற்றி கொண்ட வாட்படையையுடைய தயரதன்; ஆ கொடியாய் எனும் - (கைகேயியிபைப் பார்த்து) ஐயோ, கொடியவளே என்பான்; ஆவி காலும் - பெருமூச்சுவிடுவான்; அந்தோ ஓ கொடிதே அறம் என்னும் - ஐயோ! தருமம் மிகவும் கொடியதே என்பான்; உண்மை ஒன்றும் சாக எனா - சத்தியம் என்பதொன்று சாகட்டும் என்று சொல்லிக்கொண்டு;எழும் - எழுந்திருப்பான்; மெய் தளாடி வீழும் - உடம்பு நிற்க முடியாமல் தள்ளாடிவிழுவான். இப்பாட்டு ஒரு சோக சித்திரம்; மன்னவன் துயரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆகொடியாய் - ஆ - இரக்கக் குறிப்பு. தயரதன் அறமும் உண்மையும் நன்மைக்குத் துணை புரியாமல் இராமன்காடு புகுதலாகிய தீமைக்கு வழி வகுத்தலின் அவற்றை இகழ்கிறான். மாகம் - துறக்கம். நாகம்- பாதாளம். 25 |