பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 125

அரசளிப்பதாகச் சொன்ன வாக்குப் பொய்த்தலும் நீங்கி நன்மை உண்டாகும்
என்ற எண்ணிஅவ்வாறு செய்தான். உற்றது - கால வழுவமைதி.       29

1520.‘கொள்ளான் நின் சேய் இவ் அரசு;
     அன்னான் கொண்டாலும்,
நள்ளாது இந்த நானிலம்;
     ஞாலம்தனில் என்றும்
உள்ளார் எல்லாம்ஒத
     உவக்கும் புகழ் கொள்ளாய்;
எள்ளா நிற்கும் வன் வழி கொண்டு
     என் பயன்?’ என்றான்.

     ‘இவ் அரசு நின் சேய் கொள்ளான் - இந்த அரசாட்சியை நினக்கு
மகனாகிய பரதன்ஏற்றுக்கொள்ள மாட்டான்; அன்னான் கொண்டாலும் -
(ஒருகால்) அவன் ஏற்றுக்கொண்டாலும்;இந்த நானிலம் நள்ளாது -
இவ்வுலகம் அதனை விரும்பாது;  ஞாலம்தனில் உள்ளார் எல்லாம்-
உலகில் உள்ள எல்லோரும்; என்றும் ஓத உவக்கும் - எந்நாளும்
புகழ்வதைவிரும்பும்;  புகழ் கொள்ளாய் - கீர்த்தியைப் பெறமாட்டாய்;
எள்ளா நிற்கும்வன்பழி கொண்டு - என்றும் எல்லோரும் இகழ்தற்குரிய
வலிய பழியை ஏற்பதனால்;  பயன்என் - பயன் யாது?;’  என்றான் -.

     தயரதன் பரதன் பண்புகள் அறிந்தவனாதலின் அவன் அரசாட்சியைக்
கொள்ளான் என்றான்.கொண்டாலும் - உம்மை கொள்ளுதலின் அருமை
சுட்டியது. நானிலம் - ஆகுபெயராய் மக்களை உணர்த்திற்று.என்றும் 
என்பதனைப் பழியோடும் கூட்டி உரைக்க.                         30

1521.‘வானோர் கொள்ளார்; மண்ணவர் உய்யார்;
     இனி, மற்று என்
ஏனோர் செய்கை? யாரொடு நீ
     இவ் அரசு அள்வாய்
யானே சொல்ல, கொள்ள
     இசைந்தான்; முறையாலே
தானேநல்கும் உன் மகனுக்கும்
     தரை’ என்றான்

     ‘வானோர் கொள்ளார் - ‘இராமனைக் காட்டுக்குத் துரத்தி விட்டுப்
பரதன் அரசாள்வதைத்தேவர்களும் எற்றுக் கொள்ளார்;  மண்ணவர்
உய்யார்
- மண்ணுலகத்தவர் எவரும் உயிர்வாழார்;  இனி மற்று ஏனோர்
செய்கை என் -
இனிமேல் பிறர் செய்கையைப் பற்றிச்