பக்கம் எண் :

126அயோத்தியா காண்டம்

சொல்லவேண்டுவது  என்ன?;  நீ இவ் அரசு யாரொடும் ஆள்வாய் -
(அவ்வாறாயின்) நீஇந்த அரசினை யாரோடிருந்து ஆட்சி புரிவாய்?; யானே
சொல்ல -
நானே அவனை அரசேற்குமாறுசொல்ல; கொள்ள
இசைந்தான் -
ஏற்றுக்கொள்ள உடன்பட்டான்; முறையாலே - முறைப்படி;
உன் மகனுக்கும் தானே தரை நல்கும் - உன் பிள்ளைக்கும் தானே
நாட்டைக்கொடுப்பான்;’  என்றான் -.

     யான் வற்புறுத்த இராமக் அரசினை ஏற்க இசைந்தான்; அவன் ஆசை
கொண்டு முயலவில்லை.பரதன் நாட்டைப் பெறுவதற்காக இராமனைக்
காட்டிற்குத் துரத்த வேண்டுவதில்லை. நீ விரும்பினால்தானாகவே பரதனுக்கு
நாட்டை அளித்துவிடுவான். அப்பொழுது  முறைகேடு யாதும் நேராது
என்றான்தயரதன்.  எங்ஙனமாவது  இராமன் காடு செல்வதைத் தவிர்க்க
வேண்டும்  என்று கருதினான். வானோரையும்மண்ணில் வாழ்வோரையும்
முற்கூறினமையின் ஏனோர் என்றது  பிற மக்களையும் கீழுலகத்தவரையும்
குறித்தது.                                                     31

1522.‘ “கண்ணே வேண்டும்” என்னினும்
     ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும், இன்றே
     உனது அன்றோ? -
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! -
     பெறுவாயேல்,
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
     மற’ என்றான்.

     ‘பெண்ணே - ‘பெண்ணாகப் பிறந்தவளே!;  வண்மைக் கேகயன்
மானே
-வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே!;  கண்ணே
வேண்டும்  என்னினும் -
என்கண்களையே (நீ)வேண்டும்  என்றாலும்;
ஈயக் கடவேன் -  கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன்;  என் உள்நேர்
ஆவி வேண்டினும் -
எனது  உடலின் உள்ளே நிலவும் உயிரை
விரும்பினாலும்; இன்றேஉனது அன்றோ - இப்பொழுதே உன் வசமுள்ள
தல்லவா?; பெறுவாயேல் - வரத்தைப் பெறவிரும்புவாயானால்;  மண்ணே
கொள்நீ -
நாட்டை மட்டும் பெற்றுக் கொள்வாய்;  மற்றையது ஒன்றும் 
மற -
மற்றொரு வரத்தை மட்டும் மறந்துவிடு;’ என்றான் -.

     பெண்களுக்குரிய இரக்கம் உன்பால் இருக்க வேண்டுவதன்றோ
என்னும் குறிப்போடு ‘பெண்ணே’ என்றும்,  உன் தந்தையின் வள்ளன்மை
உனக்கும் இருத்தல் வேண்டுமன்றோ என்னும் கருத்தோடு ‘வன்மைக்
கேகயன் மானே’ என்றும் கூறினான். கண்ணிற் சிறந்த உறுப்பு
இல்லையாதலின் அதனையும், அக்கண்ணிற் சிறந்தது  உயிராதலின்
அதனையும் தருவதாகச் சொன்னான். உனது - குறிப்பு வினைமுற்று.
மற்றையது- இராமனைக் காட்டிற்கு அனுப்புதல். அதனை வாயாற்
சொல்லவும் அஞ்சி இவ்வாறு கூறினான்.                          32