பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 127

1523.‘வாய் தந்தேன் என்றே; இனி,
     யானோ அது மாற்றேன்;
நோய் தந்து என்னை
     நோவன செய்து நுவலாதே;
தாய் தந்தென்ன, தன்னை இரந்தால்,
     தழல் வெங் கண்
பேய் தந்தீயும்; நீ இது தந்தால்
     பிழை ஆமோ?’

     ‘யானோ வாய் தந்தேன் என்றேன் - யான் வாயால் வரங்களைத்
தந்தேன் என்றசொல்லிவிட்டேன்; இனி அது மாற்றேன் - இனி அதனைத்
தவறமாட்டேன்; என்னை நோய்தந்து - எனக்கு வருத்தத்தைத் தந்து;
நோவன செய்து - துன்புறத் தக்கவற்றைப் புரிந்து; நுவலாதே - (மேலும்)
அத்தகைய சொற்களைச் சொல்லாதே;  தன்னை இரந்தால் -தன்னை
ஒருவர் இரந்து வேண்டினால்;  தாய் தந்து என்ன - தாய் மனம் இரங்கித்
தருவதுபோல;  தழல்வெம் கண் பேய் - நெருப்புப் போலும் கொடிய
கண்களையுடைய பேயும்; தந்தீயும் - கொடுக்கும்; நீ இது தந்தால் - நீ
(யான் வேண்டும்) இதனைத்தருவாயானால்; பிழை ஆமோ- தவறாகுமோ?’

     இரந்து கேட்டால் பேயும் தாய்போல இசையும் என்றால் பரதனுக்குத்
தாயாகிய நீ இசைதல்தவறாகுமோ? என்றான்.  பேய் என்பதன்பின் இழிவு
சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. தந்தீயும்- தரும்; வினைத்
திரிசொல்.                                                   33

கைகேயி மறுக்கத் தயரதன் மீண்டும் இரத்தல்  

1524.இன்னே இன்னே பன்னி
     இரந்தான் இகல் வேந்தன்;
தன் நேர் இல்லாத் தீயவள்
     உள்ளம் தடுமாறாள்,
‘முன்னே தந்தாய் இவ் வரம்;
     நல்காய்; முன்வாயேல்,
என்னே? மன்னா! யார் உளர்
     வாய்மைக்கு இனி?’ என்றாள்.

     இகல்வேந்தன் - வெற்றியையுடைய அரசர்க்கரசனாகிய தயரதன்;
இன்னே இன்னேபன்னி இரந்தான் - இவ்வாறாகப் பலமுறை சொல்லி
வேண்டினான்;  தன் நேர் இல்லாத்தீயவள் - தனக்கு நிகரில்லாத
தீயவளான கைகேயி;  உள்ளம் தடுமாறாள் - மனம்சிறிதும் இரங்கினாள்
அல்லள்; மன்னா - அரசே;  இவ் வரம் முன்னே தந்தாய்