பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 129

 என் மகன், என் கண், என் உயிர்,
     எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடு இறவாமை
     நய’ என்றான்.

     ‘நின்மகன் ஆள்வான்- ‘உனக்கு மகனாகிய பரதன் ஆட்சி புரிவான்;
நீ இனிதுஆள்வாய் - நீ  இன்பமாக அதிகாரம் செலுத்துவாய்;  நிலம்
எல்லாம் -
மண்ணுலகம்முழுதும்; உன் வயம் ஆமே - உன்
வழிப்பட்டதாக ஆகும்; ஆளுதி - ஆட்சிபுரிவாய்;தந்தேன் -
கொடுத்தேன்;  உரை குன்றேன் - பேச்சுத் தவறமாட்டேன்; என்மகன் -
எனக்கு மகனும்;  என் கண் - எனக்குக் கண்போன்றவனும்; என் மகன் -
அனைத்து  உயிர்களுக்கும் சிறந்த பிள்ளை போன்றவனுமான இராமன்; 
இந்த நாடு இறவாமை -இந்த நாட்டை விட்டு வெளியேறாமை  மட்டும்;
நய - விரும்பிடுவாய்;’  என்றான் -.

     இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின்
மிகுதியையும், இராமன்சிறப்பையும் தெரிவிக்கிறது. ‘உன் உயிர்க்கு என
நல்லன்  மன்னுயிர்க்கு எலாம்’ (1350) எனவசிட்டன் உரைத்தது  ஒப்பு
நோக்கத்தக்கது.                                               36

1527.‘மெய்யே; என்தன் வேர்
     அற நூறம் வினை நோக்கி
நையாநின்றேன், நாவும்
     உலர்ந்தேன்; நளினம்போல்
கையான், இன்று, என்
     கண் எதிர்நின்றும் கழிவானேல்,
உய்யேன்; நங்காய்! உன் அபயம்
     என் உயிர்’ என்றான்.

     ‘மெய்யே - ‘சத்திமே; என்தன் வேர் அற  நூறும் - எனது மூலம்
கெடும்படிஅழிக்கும்; வினைநோக்கி - எனது தீவினையை எண்ணி; நையா
நின்றேன் -
வருந்துகின்றேன்;  நாவும் உலர்ந்தேன் - (உன்னோடு பேசிப்
பேசி) நாக்கும் வறளப் பெற்றேன்; இன்று - இந்நாளில்; நளினம் போல்
கையான் -
தாமரை போலும் கைகளையுடைய இராமன்;என் கண்
எதிர்நின்றும் கழிவானேல் -
என் பார்வையினின்று நீங்கிக் காடு
செல்வான்என்றால்;  உய்யேன் - யான் பிழைத்திருக்கமாட்டேன்;
நங்காய் - (ஆதலால்)பெண்ணே!;  என் உயிர் உன் அபயம் -
என்னுடைய உயிர் உன் அடைக்கலம் ஆகும்’;  என்றான்-.

     தயரதன் இராமன் காடு சென்றால் தன் உயிர் நீங்கிவிடும் என்பதனைத்
தெரிவித்துத் தன்னைக்காத்திடுமாறு கைகேயியை வேண்டினான்.        37