எம் குலத்துப் பெரியோர்கள் குற்றத்தின் நீங்கி ஆட்சிபுரிந்து மூப்பு அடைந்த பின்னர்த் தம் பிள்ளைகள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கத் தாம் தவஞ் செய்து வீடுபேறுபெற்றவர்களை எண்ணிப் பார்த்தால், அவர்கள் எண்ணிறந்த பலராய் இருக்கின்றார்கள் என்பதுகருத்து. நவை - காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள். ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்பன. உலப்பு - முடிவு. 16 1330. | ‘வெள்ள நீர் உலகினில், விண்ணில், நாகரில், தள்ள அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான், கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம் உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? |
‘வெள்ள நீர் உலகில் - கடலால் சூழப்பட்ட இந்த உலகத்திலும் ; விண்ணில் - வானுலகத்திலும்; நாகரில் - நாகர்கள் வாழும் கீழுலகத்திலும்; தள்ள அரு பகைஎலாம் - நீக்குதற்கு அரிய (புறப்) பகைவர்களை எல்லாம் ; தவிர்த்து நின்ற யான் - ஒழித்து வென்றுநின்ற யான் ; கள்ளரின் -திருடர்களைப் போன்று ; கரந்துஉறை காமம் ஆதி ஆம்- ஒளிந்து வாழும் காமம்முதலான ; உள் உறு பகைஞருக்கு - உள்ளே பொருந்திய பகைவர்களுக்கு ; ஒதுங்கிவாழ்வெனோ - அஞ்சி அடங்கி வாழ்வேனோ? (வாழேன்) புறப் பகையை வென்ற யான் அகப் பகையினுக்கு அஞ்சி அடங்கமாட்டேன்என்பது கருத்து. காமம் ஆதிப் பகைவர்கள் : காமம், குரோதம், லோபம் (கடும்பற்றுள்ளம்) மோகம், மதம், மாற்சரியம் என்பன ; இவற்றை வடநூலார் அரிஷட்வர்க்கம்என்பர். இவ்வாறனையும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றனுள் அடக்கிக் கூறுவது தமிழ்மரபு. தயரதன் மூவுலகும் வென்றவன் என்பது, “மாகமும் நாகமும் மண்ணும் வென்றவாளான்” (1515) என்று பின்னரும் சுட்டப்படுவது காணலாம். ஓகாரம் எதிர்மறை. 17 1331. | ‘பஞ்சி மென்தளிர் அடிப் பாவை கோல் கொள, வெஞ் சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு, எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ? |
‘பஞ்சி மென் தளிர் அடிப் பாவை - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மென்மையான தளிர்போலும் பாதங்களையுடைய கைகேயி ; கோல்கொள - சாட்டைகொண்டு தோரோட்ட ; வெம் சினத்து |