பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 131

- சிறந்த மன்னர் மன்னனாகிய தயரதன்;  இனி - இனிமேல்; நெடியான் -
இராமன்;முடிசூடாமல் - மகுடம் சூட்டிக்கொள்ளாமல்; வெம்பரல் மொய்
கானிடை நீங்க -
கொடிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டில்
உறையச்செல்ல;  மெய்யே என் ஆவி நீங்கும் என்ன- உண்மையாக
என் உயிர் பிரியும் என்றும் சொல்லி; இடி ஏறுண்ட மால்வரை போல -
இடியினை ஏற்ற பெரிய மலையைப்போல; மண்ணிடை - பூமியில்; 
வீழ்ந்தான் -சாய்ந்தான்.

     திருமாலாதலின் இராமன் நெடியோன் என்று குறிக்கப்பெற்றான்.
ஏறுண்ட - தாக்கப்பட்ட; ‘இடிஏறு உண்ட’ எனப் பிரித்தும் ‘பேரிடி வீழ்ந்த’
எனப் பொருள் உரைப்பாரும் உண்டு. ‘காத்தலும்’என்ற பாடத்தினும்
‘வெம்பரல்’ என்று பாடமே சரி.                                   39

1530.வீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின்
     கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு
     ஓர் கரை காணான்;
சூழ்ந்தாள் துன்பம் சொற்
     கொடியாள், சொல்கொடு நெஞ்சம்
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை
     நோக்கிப் புலர்கின்றான்.

     வீழ்ந்தான் - (தயரதன்) மண்ணில் விழுந்தான்;  வீழா - விழுந்து;
வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து - கொடிய துயரமாகிய கடலின்
வெள்ளத்தில்; ஆழ்ந்தான்- அமுந்தினான்; ஆழா - அழுந்தி;
அக்கடலுக்கு ஓர் கரை காணான் - அந்தக்கடலுக்கு ஒர் எல்லை
காணாதவன் ஆனான்; துன்பம் சூழ்ந்தாள் - தனக்குப் பெருந்துன்பத்தைச்
சூழ்ந்துகொண்டவளும்;  சொல் கொடியாள் - கொடிய
சொற்களையுடையவளும்; சொல்கொடுநெஞ்சம் போழ்ந்தாள் - தன்
பேச்சால் மனத்தைப் பிளந்தவளுமான கைகேயியின்; உள்ளன்புன்மையை
நோக்கிப் -
மனத்தின் சிறுமையை எண்ணி;  புலர்கின்றான் -
வாடுகின்றான்.

     துயரத்தைக் கடலாக உருவகித்ததற்கு ஏற்பக் ‘கரை காணான்’ என்றார்.
வீழ்ந்தான் - வினைமுற்று.சூழ்ந்தாள், கொடியாள்,  போழ்ந்தாள் -
வினையாலணையும் பெயர்கள்.                                   40

1531.‘ “ஒன்றாநின்ற ஆர் உயிரோடும்,
     உயர் கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர்”
     என்னும் புகழ் அல்லால்,
இன்று ஓர்காறும், எல் வளையார்,
     தம் இறையோரைச்