பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 133

1532.‘ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்;
     அறம் எண்ணாய்;
“ஆ!” என்பாயோ அல்லை; மனத்தால்
     அருள் கொன்றாய்;
நா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்;
     இனி, ஞாலம்
பாவம் பாராது, இன் உயிர்
     கொள்ளப் படுகின்றாய்!

     ‘ஏவம் பாராய் - (என்) துன்பத்தைப் பார்க்கின்றாய் அல்லை;  இல்
முறை நோக்காய்-
நற்குடிப் பிறந்த பெண்ணின் நடைமுறையையும்
கருதுவாய் அல்லை; அறம் எண்ணாய் -தருமத்தையும் நினைக்க மாட்டாய்;
ஆ என்பாயோ அல்லை - ஐயோ என்று இரங்குவாயும் அல்லை;
மனத்தால் அருள் கொன்றாய் - உன் மனத்தில் அருள் என்னும்
பண்பையே கொன்றுவிட்டாய்; என் ஆர் உயிர் - என்னுடைய அரிய
உயிரையும்;  நா அம்பால் உண்டாய் - உன் நாக்காகியஅம்பினால்
கொன்றாய்; இனி ஞாலம் பாவம் பாராது - இனி இவ் வுலகத்து மக்களால்
(பெண்கொலை)பாவம் என்று பாராமல்;  இன் உயிர் கொள்ளப்
படுகின்றாய் -
உன் இனிய உயிரைக்கொள்ளப்படப் போகின்றாய்.

     பெண்ணிற்குரிய எந்த நற்பண்பும் இல்லாத உன்னை உலகத்தாரே
கொன்றொழிப்பர் என்கிறான்.ஏவம் - எவ்வம் என்பதன் விகாரம் மனத்தால்
அருள் - உருபு மயக்கம்.  உண்டாய் - தெளிவு பற்றிவந்தகால
வழுவமைதி.                                                  42

1533.‘ஏண்பால் ஓவா நாண்,
     மடம், அச்சம், இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்;
     புகழ் பேணி
நாண்பால் ஓரா நங்கையர்
     தம்பால் நணுகாரே;
ஆண்பாலாரே; பெண்பால்
     ஆரோடு அடைவு அம்மா?

     ‘ஏண்பால் ஓவா - பெருமையின் பகுதியிலிருந்து நீங்காத; நாண்,
மடம் அச்சம்-
நாணம், மடம்,  அச்சம் முதலிய;  இவை தம் பூண்பால்
ஆக
- இவற்றைத் தம்முடையஅணிகலன்களாக; காண்பவர் நல்லார் -
கருதுபவர் நற்பெண்டிர் ஆவர்; புகழ் பேணி -புகழை விரும்பி; நாண்பால்
ஓரா நங்கையர் -
நாணத்தின் தன்மையை அறியாத மகளிர்; தம் பால்
நணுகாரே
- தம் இனத்தில் சேர்ந்தவர் ஆகார்;