பக்கம் எண் :

134அயோத்தியா காண்டம்

ஆண்பாலாரே -(அவர்கள்) ஆண்மக்களே;  பெண்பால் ஆரோடு
அடைவு அம்மா -
பெண்ணினத்தில் யாரோடுசார்ந்தவர் ஆவார்?’
(ஒருவரோடும் சார்ந்தவர் அல்லர்)

     பெண்களுக்குரிய சிறந்த பண்புகள் நாணம்,  மடம், அச்சம், பயிர்ப்பு
என்பன. உபலட்சணத்தால் பயிர்ப்பும் கொள்ளத் தக்கது. நாணம் -
தகாதவற்றின்கண்உள்ளம் ஒடுங்குதல்; மடம் - அனைத்தும் அறிந்தும்
அறியாதது போல் இருத்தல்; அச்சம் - என்றும்காணாததைக் கண்டவிடத்து
அஞ்சுதல்; பயிர்ப்பு - தன் கணவன் அல்லாதவரின் கைமுதலியன மேற்படின்
அருவருத்தல்.  ஆண்பாலாரே - ஏகாரம் தேற்றம்; நணுகாரே - ஏகாரம்
அசை;  அம்மா - வியப்பிடைச்சொல்.                            43

1534.‘மண் ஆள்கின்றார் ஆகி,
     வலத்தால் மதியால் வைத்து
எண்ணா நின்றார் யாரையும்,
     எல்லா இகலாலும்,
விண்ணோர்காறும், வென்ற எனக்கு,
     என் மனை வாழும்
பெண்ணால் வந்தது, அந்தரம்
     என்னப் பெறுவேனோ?’

     ‘மண் ஆள்கின்றார் ஆகி - நாட்டை ஆளுகின்ற அரசர்களாகப்
பட்டம் ஏற்று;  வலத்தால் - வலிமையாலும்;  மதியால் - அறிவினாலும்;
வைத்து எண்ணாநின்றார்யாரையும் - மேலாக வைத்துப்
போற்றப்படுகின்ற அரசர்கள் எல்லாரையும்; விண்ணோர்காறும்- தேவர்கள்
வரையிலும்; எல்லா இகலாலும் - எல்லாப் போரிலும்; வென்ற எனக்கு-
வெற்றி கொண்ட எனக்கு; என்மனை வாழும் பெண்ணால் - என்
அரண்மனையில் வாழும்பெண்ணினால்;  அந்தரம் வந்தது என்னப்
பெறுவேனோ -
முடிவு நேர்ந்தது  என்று சொல்லத்தக்க நிலையை
அடைவேனோ!’

     வலமும் மதியும் நிறைந்த மன்னர்களை வென்ற எனக்கு
அவையில்லாத மனைவியால்முடிவுவந்துவிடுமோ என்கிறான். மனை வாழும்
பெண் - மனைவி இகலால் - உருபுமயக்கம்.                        44

1535.என்று, என்று, உன்னும்;
     பன்னி இரக்கும்; இடர் தோயும்;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல்
     உழக்கும்; ‘உயிர் உண்டோ?
இன்று! இன்று! ’ என்னும்
     வண்ணம் மயங்கும்; இடையும் - பொன் -