பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 135

 குன்று ஒன்று ஒன்றோடு
     ஒன்றியது என்னக் குவி தோளான்.

     பொன்குன்று ஒன்று - பொன்மலை ஒன்று; ஒன்றோடு ஒன்றியது
என்ன -
மற்றொருபொன்மலையோடு கூடியது என்னுமாறு;  குவி
தோளான்
- திரண்ட தோள்களையுடைய தயரதன்; என்று என்று
உன்னும் -
முற்கூறியவாறு பலபடியாக நினைப்பான்;  பன்னி இரங்கும் -
வாயினால் பல சொல்லி வருந்துவான்; இடர் தோயும்- துன்ப வெள்ளத்தில்
அழுந்துவான்; ஒன்று ஒன்று ஒவ்வா - ஒன்றோடு ஒன்று பொருந்தாத;
இன்னல் உழக்கும் - பலவகைத்துன்பங்களால் வருந்துவான்; உயிர்
உண்டோ -
மூச்சு இருக்கிறதோ; இன்று இன்று என்னும்வண்ணம் -
இல்லை இல்லை என்று கூறும்படி;  மயங்கும் - மூர்ச்சையுறுவான்;
இடையும்- (நெஞ்சம்) உடைவான்.

     தோய்தல் என்னும் வினைக்கு ஏற்றவாறு இடர் வெள்ளமாக உரைக்கப்
பட்டது.  ‘பொன் குன்றுஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன’ -  இல்பொருள்
உவமை.                                                     45

கைகேயி, ‘உரை மறுத்தால் உயிர் விடுவேன்’ எனல்  

1536.ஆழிப் பொன் - தேர் மன்னவன்
     இவ்வாறு அயர்வு எய்தி,
பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப்
     புரள் போழ்தில்,
“ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றேல்,
     உயிர் மாய்வென்;
பாழிப் பொன் - தார் மன்னவ!’ என்றாள்,
     பகை அற்றாள்.

     ஆழிப் பொன் தேர் மன்னவன் - சக்கரங்களையுடைய பொன்னால்
ஆகிய தேரையுடையதயரதன்; இவ்வாறு அயர்வு எய்தி - இப்படித்
தளர்ச்சி அடைந்து; பொன் தோள் முற்றும்பூழி அடங்க - அழகிய தன்
தோள்கள் முழுவதும் புழுதி போர்க்க; புரள் போழ்தில் -(தரையில்)
உருளும்போது; பசை அற்றாள் - நெஞ்சில் ஈரமில்லாத கைகேயி; ‘பாழி
பொன் தார் மன்னவ -
பெருமை பொருந்திய பொன் மாலை அணிந்த
அரசே; ஊழின் பெற்றாய்- முறையாகப் பெற்றாய்; என்று உரை - என்று
உன்வாயால் சொல்; இன்றேல் -அவ்வாறு சொல்லாவிட்டால்; உயிர்
மாய்வென் -
நான் உயிரைப் போக்கிக்கொள்வேன்;’என்றாள் -.

     இப்பாட்டு, கைகேயியின் கல்நெஞ்சைக் காட்டுகிறது. ‘மன்னவ’ என்னும்
விளி சொன்னசொல்லைக் காத்தலும், அறத்தைப் போற்றுதலும் அரசனாகிய