பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 137

இறுந்துவிடுவான் என்று கருதி;’ இவ் வரம் ஈந்தேன் ஈந்தேன் - இந்த
வரங்களைக் கொடுத்தேன்,கொடுத்தேன்; என் சேய் வனம் ஆள - என்
மகன் இராமன் காட்டை ஆள;  நான் மாய்ந்துபோய் - யான்
இறந்துபோய்;  வான் உலகு ஆள்வென் - விண்ணுலகை ஆள்வேன்;
நெடிது- நெடுங்காலம்;  நின் மகனோடும் - (நீ) நின் பிள்ளையாகிய
பரதனுடன் கூடி;  வசை வெள்ளம் - பழியாகிய கடலை;  நீந்தாய்
நீந்தாய் -
கடக்க முடியாமல் அதனுள்நீந்திக்கொண்டே இருப்பாய்;’
என்றான் -.

     தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று
அஞ்சி,  ‘ஈந்தேன், ஈந்தேன்’ என்று விரைந்து  கூறினான். இவ் அடுக்கு -
தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி
இறந்த காலத்தில் கூளினார்.                                     48

தயரதன் துயர் கொள்ள, கைகேயி துயிர் கொள்ளல்  

1539.கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க,
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி,
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள்.

     கூறா முன்னம் - (தயரதன் இவ்வரத்தை ஈந்தேன் என்று,  கூறி
முடிப்பதற்குள் முன்னே;கூறுபடுக்கும் - இரு கூறாகப் பிளக்கின்ற;
கொலைவாளின் ஏறு ஆம் என்னும் -கொலைத் தொழிலையுடைய
வாளின் தாக்குதலோடு ஒத்ததாகும் என்று சொல்லத்தக்க;  வன் துயர்
ஆகத்து இடை மூழ்க -
கொடிய துன்பம் மனத்தில் புக; தேறான் ஆகி -
உணர்வற்றவன்ஆகி; செய்கை மறந்தான் - செயல்மறந்து மயங்கினான்;
செயல்முற்றி - (தன்காரியம்) முடிவுற்றதனால்; ஊறா நின்ற
சிந்தையினாளும் -
மகிழ்ச்சி  ஊறுகின்ற மனமுடையகைகேயியும்;
துயிலுற்றாள் - உறங்கினாள்.

     இப்பாட்டில், தயரதன் துயரினால் செயலற்றுக் கிடக்க, கைகேயி
மகிழ்ச்சியினால் மெய்ம்மறந்துதூங்கினாள் எனக் துயருற்றார்க்கும்
மகிழ்ச்சியடைந்தார்க்கும் ஒரேநிலை நிகழ்ந்த தன்மை கூறப்பட்டது.வாள்
ஏறு - வாளின் தாக்குதல். இடியேறு என்பது போல,  செயல் முற்றலாவது -
தான் வேண்டிய வரங்களைப்பெற்றுக்கொண்டது.                    49

இரவு கழிதல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

1540.சேண் உலாவிய நாள் எலாம் உயிர்ஒன்று
     போல்வன செய்து, பின்