பக்கம் எண் :

14அயோத்தியா காண்டம்

அவுணர் தேர் பத்தும் - கொடிய கோபத்தையுடைய அசுரர்களின் பத்துத்
தேர்களையும் ;  வென்று உளேற்கு - வென்றுள்ளவனாகிய எனக்கு ;
எஞ்சல்இல் மனம் எனும் - குறைவு அற்ற மனம் என்னும் ;  இழுதை
ஏறிய
- பேய் ஏறிச்செலுத்துகிற ;  அஞ்சு தேர் - பொறியாகிய ஐந்து
தேர்களை ;  வெல்லும்ஈது - வெல்லும் தொழிலாகிய இது ;  அருமை
ஆவதோ
- அருமைப்பாடு உடையதுஆகுமோ? (ஆகாது)’

     பஞ்சிமென் தளிர்அடி - பஞ்சினையும் தளிரினையும் நிகர்த்த அடிகள்
எனலும் ஆம். கோல் கொள்ளுதலாகிய காரணம் தேரை ஓட்டுதலாகிய
காரியத்தை உணர்த்தியதால்உபசார வழக்கு. இழுதை - பேய் ;  “இழுதை
நெஞ்சினோன்” (2201). பத்துத் தேர்களைவென்றவனுக்கு ஐந்து தேர்களை
வெல்லுவது அரிதாவதோ என்றது நயம்.                            18

1332. ‘ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடைப்
பட்டவர் அல்லரேல், பரம ஞானம் போய்த்
தெட்டவர் அல்லரேல், “செல்வம் ஈண்டு” என
விட்டவர் அல்லரேல், யாவர் வீடு உளார்?

     ‘ஒட்டிய பகைஞர் வந்து - வஞ்சினம் கூறிய பகைவர்கள் எதிர்த்து
வந்து ;  உருத்த போரிடை - சினந்து செய்யும் போர்க்களத்தில் ;
பட்டவர் அல்லரேல்
- இறந்தவர் அல்லராயின் ;  பரம ஞானம்
போய்த்தெட்டவர்அல்லரேல்
- மேலான ஞானம் கைவரப் பெற்றுத்
தெளிந்தோர் அல்லராயின் ;  ‘செல்வம் ஈண்டு’ என - ‘பொருள்
பயன்படுவது இவ்வுலகில் மட்டுமே’ என்று உணர்ந்து ; விட்டவர்
அல்லரேல்
- அதனை முற்றுத் துறந்தவர் அல்லராயின் ;  யாவர் விடு
உளார்
- யாவர் வீட்டுலகத்தை அடைபவர் ஆவார்? (ஒருவரும் ஆகார்).’

     போர்க்களத்தில் வீழ்ந்த மறவரும், ஞானம் மிக்கு மெய்யுணர்வு கூடப்
பெற்றவரும், செல்வ நிலையாமை உணர்ந்து துவரத் துறந்தவரும் வீடு
பெறுவார் என்பது கருத்து.உருத்தல் - சினத்தல். பரமஞானம் - எல்லாம்
இறைவனாகக் காணும் மேலான ஞானம். தெட்டவர் -தெளிந்தவர்.
தயரதனுக்குப் பகையின்மையால் போரிடை வீழ்தலும், பரம ஞானம்
கூடாமையால்தெளிவும் வாய்த்தில. ஆதலால் செல்வ நிலையாமை
உணர்ந்து துறவுநெறி சேர்தலே வீடு பெறற்குவழியாய் அமைந்தது என்பது
போதரும்.                                                    19

1333. ‘இறப்பு எனும் மெய்ம்மையை,
    இம்மை யாவர்க்கும்,
மறப்பு எனும் அதனின்மேல் கேடு
    மற்று உண்டோ?
துறப்பு எனும் தெப்பமே
    துணை செய்யாவிடின்,